Untitled Document
Home| Trust Services | சித்தர் சிவந்திலிங்கசுவாமிகள் செய்த அற்புதங்கள் | உயிரோசை இதழில் | Video | Enquiry | Photos | Contact Us

This man.org மற்றும் Ever Dream This Man"என்ற இணையதளம் மூலம்
உலகம் முழுதும் பல ஆண்டுகளாக தினமும் பல்லாயிரம் பேர் கனவுகளில் கண்டு தேடும் நிஜமுகம்

நிஜமுகம் கனவில்பார்த்தமுகம்
(வரைபடம்)
நிஜமுகம்
அய்யா கல்கி கண்ணன் கனவில்பார்த்தமுகம்
(வரைபடம்)
அய்யா கல்கி கண்ணன்
இறைவன் நினைத்தால் ஒரு நொடிப்பொழுதில் எல்லாம் மாறும்

உலகில் யாரெல்லாம் என்னைக் கனவில் கண்டும் நினைவிலே தேடிக்கொண்டும் இருக்கிறீர்களோ, நீங்களெல்லாம் கடவுளின் மிகுந்த அன்பிற்கு பிரிய மானவர்களாக கடவுளால் ஆசிர்வதிக்கப்ட்டவர்களாக இருக்கிறீர்கள். நீங்களும் அமையபோகும் சம்புவந்தர் ஆட்சியில் முக்கிய அங்கம் வகிக்க உள்ளீர்கள்

இந்த சத்சங்கமத்தால்(ஆத்ம சங்கமம்) சநாதன தர்மம் கூறும் புராணங்களும், இதிகாசங்களும் இறை தூதர்களும் கூறிய "கல்கியின்" ஆட்சியை இவ்வுலகம் காண இருக்கிறது. அவன் ஆட்சியில் போர்கள் ஒழிந்து விடும். மனிதகுலம் வெற்றிநடைபோட்டு, அமைதி பாதையில் முன்னேறிச் செல்லும். விண்ணுலகம்வாழ்த்த மண்ணுலகம் தழைக்க அதர்மம் என்னும் அஞ்ஞானம் அகன்று தர்மம் என்னும் சத்தியஞானம் தளைத்தோங்கும்

மனிதன் தர்ம வழி மாறி சீரழியக் கூடாது என்றுதான் அவ்வப்போது இறைவனால் பல இறைதூதர்கள் இம்மண்ணிலே அவதரித்தார்கள், குறிப்பாக, ஆதிசங்கரர், ஏசுகிருஸ்து, நபிகள் நாயகம், புத்தர், வள்ளலார், மகாத்மா காந்தி போன்ற அவதார புருஷர்களால் சத்தியத்தையும் சமதர்மத்தையும், வாழ்க்கை நெறி முறைகளையும் பற்றி மக்களுக்கு போதிக்கப்பட்டது.

துவாபர யுகத்தில் வாழ்ந்த (5000 ஆண்டுகளுக்கு முன்பு) ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர், கருடாழ்வார், திரௌபதி உள்ளிட்ட பாண்டவர்கள், பீஷ்மர், விதுரர், கிருபர், துரோணர் உள்ளிட்ட மகாத்மாக்கள், மீண்டும் பிறந்து விட்டார்கள்.

இப்பூவுலகில் இனி கடவுளின் ஆட்சி நடைபெற இருக்கிறது. பதினெண் சித்தர்களின் ஆசிகளையும், ஆதிசக்தியின் அருளையும் பரிபூரணமாகப்பெற்ற ஒருவன், சத்தியத்தை நிலைநாட்டி, சமதர்மத்தை வியாபித்து எங்கும் சமநீதியான ஒரு நல்லாட்சியைத் தர இருக்கிறான்.

அந்த கிள்நாமக்காரனும் பிறந்துவிட்டான் (கோரக்கர் சந்திரரேகையில் கூறியது) அவன் யாரென்றும் இவ்வுலகிற்கு சொல்லப்போகிறோம். மேலும் எம்குருநாதரும், அன்னை ஸ்ரீ வராஹியும் என்னுள் உணர்த்திய நான் பல ஆண்டுகளாக சித்தர் பீடங்களிலும், ஆன்மீகச் சொற்பொழிவுகளிலும் சொல்லிவந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழச்சக்ரவர்த்தியான ராஜ ராஜ சோழன் மீண்டும் பிறந்த விட்ட விபரத்தையும், அவர் யாரென்றும் சொல்லப் போகிறோம். 450 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்தை ஆண்ட செம்பூதியில் ஜீவசமாதியிலிருக்கும் எனது பாட்டனார் சித்தர் ஸ்ரீ ஏகம்மையார் சமேத சித்தர் ஸ்ரீ சிவந்திலிங்க சுவாமிகளின் காலத்தில்வாழ்ந்த விஜயரகுநாத சேதுபதி மன்னனும் பிறந்துவிட்டார். அவரும் யாரென்றும் சேதுபதி மன்னனின் உற்ற நண்பரான அம்மன் குறிச்சியை ஆண்ட பூச்சய நாயக்க மன்னனும் இப்பொழுது யாராகப் பிறந்திருக்கிறார் என்றும் சொல்லப் போகிறோம். மேலும் பல உயர்ந்த ஆன்மாக்கள் எல்லாம் பிறந்துள்ள நேர்மையையும், அவர்களால் அமையவுள்ள தர்ம ஆட்சிக்குள்ள பங்கினையும் சொல்லப்போகிறோம்.

மேலும் அன்பு, அஹிம்சை, சத்தியம் போன்ற மகாத்மா காந்தி விரும்பிய நல்லாட்சியை இனி இப்பூமி காணும் பாக்கியம் பெற இருக்கிறது.
அமெரிக்கா எனும் தேசத்தை தற்பொழுது ஆளும் அதிபர் ஓபாமா அவர்களின் ஆசையும் நிறைவேறும். அதாவது மகாத்மா காந்தியோடு உணவு சாப்பிட ஆசை என்ற விருப்பமும் நிறைவேறும். ஆம். மகாத்மா காந்தியின் ஆத்மாவும் மீண்டும் பிறந்து விட்டது. அவர் யார்? எங்கிருக்கிறார் என்றும் கூறப்போகிறோம். இவையனைத்தும் எம்குருநாதர் எமக்கு உணர்த்தியதை யாம் உலகிற்க்கு கூறினோம். அனைத்து உயர்வான ஆத்ம சங்கமம் நிகழட்டும். வாருங்கள் அனைவரும் ஒன்றுபட்டு சத்திய சம தர்மத்தை இறைவனுடைய பரிபூரண அருளோடு நிலை நிறுத்துவோம்.



இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள், ஆன்மாவைப் பற்றியும் சொல்லப் போகிறோம்.தற்பொழுது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா அவர்கள், ஆன்மாவைப் பற்றியும் சொல்லப் போகிறோம்.

2008ம் ஆண்டிலிருந்து எம்மால் ராணா என்று உச்சரிக்கப்படும்.
உலகெங்கும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்களின் ஆன்மாவைப் பற்றியும் சொல்லப் போகிறோம். அவர் இனி என்ன செய்ய பிறப்பிக்கப் பட்டிருக்கிறார். அவர் கேட்கும் ஆண்டவன் கட்டளை என்ன என்பதையும் சொல்லப்போகிறோம். அவரும் உலகமும் தேடும் மகா அவதார் பாபாஜியின் இப்பொழுது உள்ள வாசஸ்தலத்தையும் சொல்லப் போகிறோம். ரஜினிகாந்தால் இப்பூமியில் உயர்ந்ததொரு தர்மம் வியாபிக்க இருக்கிறது. குறிப்பாக "அரசாள்வார்" ஆனால் கட்சி ஆரம்பிக்கமாட்டார். அரசியலுக்கும் வரமாட்டார். இது எப்படி சாத்தியம் என்று நினைக்கலாம். இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும். சாதி மத பேதமற்ற சமுதாயம் காண விரும்பும் அனைத்து உயர்ந்த ஆன்மாக்களுக்கும் உயர்ந்த நிலை கிடைக்கும். குறிப்பாக விஜயகாந்த் அவர்களுக்கும் அதில் முக்கியப் பங்கிருக்கும். அவருடைய பூர்வஜென்ம ஆன்மாவைப் பற்றியும் சொல்லப் போகிறோம்.

நரேந்திர மோடி, ஷோ, கமலஹாசன், சூர்யா, அஜித், விஜய், அர்ஜூன் இவர்களுடைய பூர்வ ஜென்ம ஆன்மாவைப் பற்றியும் சொல்லப்போகிறோம்.

உலகம் இறைவனால் படைக்கப்பட்டது. மனித சமுதாயமும், மற்ற பிற உயிரினங்களும், தம்வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப அமைதியாகவும், அன்பாகவும், வாழ்வதற்கான அனைத்து சூழ்நிலைகளையும், இறைவன் இயற்கையாகப் படைத்துத் தந்திருக்கிறான். இந்தபூமி, காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள், சந்திர சூரியர்கள் உள்ளிட்ட அண்டங்கள் படைத்தது யாவும் மனித குலம் அனைத்தும் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்து இறை நிலையைப் பின்பற்றி ஆன்மநேய ஒருமைப்பாடு அடைய வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால் இந்த பூமியைப் படைக்கும்பொழுது எந்த எல்லைக்கோடுகளையும் இறைவன் படைக்கவில்லை. பஞ்ச பூதங்களையும், இயற்கையையும் மனிதகுலத்தின் பொது சொத்தாகவே இறைவன் படைத்தான். மனிதனோ சுயநலத்தாலும், பேராசையாலும், என்மக்கள், என் வாழ்க்கை என்ற மமதையோடு போர்புரிவது கடமை என்று சொல்லி, அதற்காக பல காரணங்களை வகுத்து, சாதி, மதம், இன வேறுபாடுகளைப் புகுத்தி கலகங்களையும், போர்களையும் உருவாக்கி தனது குலத்தைத் தானே அழிக்கின்ற ஒரு வெறிகுணத்தை உருவாக்கிக் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக போர், பஞ்சம், வறுமை, பிணிகளால் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிகின்ற அவலங்கள் நடைபெற்று வருகிறது.

மேலும் பணக்காரன், ஏழை என்ற பேதம் ஆண்டான், அடிமை என்கின்ற பேதம், வலிமையுடையவன் வலிமையற்றவன் என்ற பேதங்கள் ஏற்பட்டு பொருள் இல்லாதவன், இருப்பவரிடமிருந்து பெற அதர்மத்தின் வழியையும், குற்றங்களையும் பழி பாவங்களையும் செய்யத் துணிந்ததின் விளைவு, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், குண்டுவெடிப்புகள் மரண ஓலங்கள், அவலங்கள் நடைபெறுகின்றன. மேலும் மனிதன் இயந்திர மயமாகிவிட்டான். அதன் மூலம் ஒருபக்கம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், ஒருபக்கம் ஏழ்மை வறுமை, பட்டிணிச்சாவுகள் என்கின்ற கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் கலியின் சாபத்திற்கிணங்க 5000 ஆண்டுகள் அதர்மத்தின் வழியான, போர்களையே இப்பூமி கண்டுள்ளது. அலெக்ஸாண்டர் போன்ற மன்னர்கள் போர்களால் இவ்வுலகையே ஆள நினைத்தார்கள். ஆனாலும் அவர்கள் மாண்டதோடல்லாமல் இப்பூமியிலிருந்து ஒருபிடி மண்ணைக் கூட எடுத்து செல்லவில்லை. மன்னர்களாலும், தனிமனிதனாலும் எத்தனை எல்லைக்கோடுகள் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டாலும், இந்தபூமி யாருக்கும் சொந்தமில்லை. ஏனெனில் இந்தபூமி இறைவனால் படைக்கப்பட்டது. இது இறைவனுக்குச் சொந்தமானது. எவ்வளவு வேண்டுமானாலும் அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. இந்த நியதிகளை மீறும்பொழுது இறைவன் கோபப்படுகிறான். அதன்விளைவு இயற்கை சீற்றமடைகிறது. இயற்கையின் சீற்றத்திற்குமுன் மனிதன் ஒரு அணுப்பிரமானம் தான் என்பதை ஒருபோதும் மனிதன் மறந்து விடக்கூடாது.

சத்தியத்தையும் சமதர்மத்தையும் காப்பது நாட்டில் குற்றங்கள் நடைபெறாவண்ணம் காப்பது, குடிமக்கள் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்திட வழிமுறைகள் செய்து நடுநிலைமையோடு அறம்சார்ந்த தர்மத்தை நிலை நிறுத்துவது, நல்ல கலைகள், நல் அறிவு, நல் ஆராய்ச்சி நற்தொழில்கள், நல்வியாபாரம் இவற்றோடு நல்ல தவத்தையுடைய சான்றோர்களுக்கு ஒரு குறையும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பது, பொருளாதார வளர்ச்சியோடு, ஆன்மநேய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது. பவித்திரமான பெண்களுக்குறிய பாதுகாப்பு அளிப்பது பஞ்சம், பிணி, பட்டிணி, ஏழ்மையில்லாத மனித சமுதாயம் ஏற்படுத்துவதே ஒரு நல்லரசின் கடமையாகும்.

இந்த தர்மநெறிகள் மீறப்படும் பொழுது இறைவனின் கோபத்தால் பஞ்சபூதங்கள் சீற்றமடைகின்றன. இயற்கையின் சீற்றத்தால், பூகம்பம், சுனாமி, புயல், பெருவெள்ளம், அதிகமழை, அதிக உஷ்ணம் எரிமழைகள் வெடித்து குழம்புகக்குதல் போன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றன. இப்பொழுதும் எங்கு பார்த்தாலும் இயற்கை சீற்றங்கள் அதிகரித்துள்ளது. காரணம், அதர்மம், அஞ்ஞானம், மனிதநேயமின்மை, விண்வெளிக்குப் பயணம் செய்யும் வளர்ச்சி, மணிக்கு பலதேசம் சுற்றும் வளர்ச்சி, ஆகாயத்தில் பறக்கும் வளர்ச்சி என்று விஞ்ஞான வளர்ச்சி ஒருபக்கம் ஏற்பட்டாலும், பசியும் பட்டினிச்சாவும் நடப்பதேன், வறுமையும் பிணியும் பீடிக்கப்பட்டு ஒருசாரார் அழிவதேன்? சத்தியத்தையும் சமதர்மத்தையும் நிலைநிறுத்தாமலும், அவதாரபுருஷர்களும், சித்தர்களும், மகான்களும் காட்டிய உயரிய பாதைகளை கடைபிடிக்காமலும், மனம் போன போக்கில் மனிதன் வாழப்பழகியதின் குற்றமாகும், அதர்மம் என்கின்ற விளை கொடுத்து மனிதன் பேரழிவுகளை வாங்கிக் கொள்கிறான்.

இப்பாதை இன்னும் தொடருமேயானால் பெரும் பேரழிவை மனிதகுலம் சந்தித்தே ஆகவேண்டும். இவையனைத்தும் எம்குருநாதர் சத்குரு, ஜகத்குரு, ஆதிசக்தியின் மைந்தன் சித்தர்ஸ்ரீ முத்துவடுகேசர் என்னை முன்னிருத்தி இவ்வுலகிற்குச் சொல்லும் செய்தியாகும்.
எனவே பூர்வ ஜென்ம வினையின் பயனாக உலகில் பலவாறாக பிரிந்து கிடக்கின்ற அனைத்து நல் ஆன்மாக்களையும் ஒன்று திரட்டும் முகமாக கனவில் ஆத்ம பிரவேசமாக எனது உருவத்தை சங்கமிக்க வைத்துள்ளார்.

அறிவு என்பது ஆன்மாவின் துணை கொண்டு முன்னேறும். பணக்காரன், எழை என்ற வேறுபாடு, நல்லவன் கெட்டவன், வல்லவன், வல்லமை இல்லாதவன் என்ற வேறுபாடுகள் அழிந்து எல்லோரும் இன்பமயமாக வாழும் ஒரு இனிய உலகம் உருவாகும்.
இப்பூமியில் காணும் எல்லைக்கோடுகள் அழிந்து சாதி, மத, இன முறைகள் யாவும் அழிந்து மானிடம் என்ற ஓரே நிலை உருவாகும். நிற வேறுபாடுகள், உருவ வேறுபாடுகள், தேச வேறுபாடுகள், இருப்பிட வேறுபாடுகள், நாட்டின் வேறுபாடுகள் களையப்பெற்று எல்லோரும் உறவினர், மனிதகுலம் ஒன்றே அனைவரும் இறைவனின அருட் குழந்தைகள் என்ற நிலை ஏற்படும். சாதி, மதம், இனம்,மொழி என்ற பிரிவினை, எந்நாடு, என் மக்கள் என்ற சுயபற்றுகளை ஆதி மனிதன் அறிந்திருக்கவில்லை. இவையெல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளாக காலத்தின் கட்டாயத்தால் விளைவிக்கப்பட்ட விஷ வித்துகளாகும். மனித குலம் அனைத்தும் பேதங்கள், வேறுபாடுகள் அல்லாத ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டால் சூரிய சந்திரர்கள் உள்ளவரை மனித குலம் சகல நன்மைகளையும் பெற்று நல்வாழ்க்கை வாழ வழிவகைகள் கிடைக்கும்.

கோரக்கர் சித்தர் தனது சந்திரரேகை என்னும் நூலில் கூறியுள்ளபடி இயற்கை வளம் கொழிக்கும். பஞ்ச பூதங்கள் அமைதியுறும் இறைவனின் பரிபூரண நல்லாசிகள் கிடைத்துக் கொண்டேயிருக்கும். அகத்தியர் முதல் சித்தர்களும், அவதார புருஷர்களும், இறை தூதர்களும் இப்பூமியில் நிலை நிறுத்த விரும்பிய சக்கரப்பார்வேந்தனான சத்திய சமதர்ம சம்புவந்தர் ஆட்சி எங்கும் நிலைத்து வியாபிக்கும்.



மதம்

மதம் என்னடா மதம் - நீ
மனிதன் என்பதை
மறந்து விட்ட பின்
மதம் என்னடா மதம்?

வதம் செய்யும் கொள்கை சொன்ன
வாக்கு யாருடைய வாக்கு
நிதம் துவேஷத் தீயினில்
நெய்யை வார்த்திடும் போக்கு என்னபோக்கு

அன்பைச் சொன்னது மார்க்கம்-நல்ல
அஹிம்சை சொன்னது மார்க்கம்.
தன்னைப் போல் பிற உயிர்களைத் தாங்கிடும்
பண்பைச் சொன்னது மார்க்கம்.

பகையை மூட்டுவது எது?
கொலையைத் தூண்டுவது எது?
புகை ஊதி தீயாய் பெருநெருப்பாய்
(ஊரை) அழிக்கச் சொல்வது எது?
-மதம் என்னடா மதம்.
மதமான பேய் பிடியாதிருந்து மார்க்கங்கள்
வழிநடப்பாய் மானிடா - உன்
மனித இனம் பயனுறவே.
       -எஸ்.பி.இராமச்சந்திரன்(தாமரை நூலகம்)


சத்திய சமதர்மக்கொடி 2008: விஜயதசமியன்று ஸ்ரீ வராஹியின் உணர்த்தலால் உருவாக்கப்பட்டது.

ஸ்ரீவராஹி : கொம்புடைய பன்றி முகமுடையவள் (ஆதி சக்தியின் படைத்தளபதி)

ஊதா - ஆகாயம் - சத்தியம்
வெண்மை - வெட்டவெளி - சமம்
பச்சை - பூமியின் பசுமை - தர்மம்
சக்கரம்- மனிதனுக்குள் உள்ள ஆறாதார நிலைச் சக்கரங்கள்

ஒற்றுமை

மனிதா உனக்கு தேவை ஒற்றுமை
மழை வேண்டுமா உனக்கும் மரத்திற்கும் ஒற்றுமை
உடைவேண்டுமா தேவை உனக்கும்
மானத்திற்கும் ஒற்றுமை
அன்பறிவு வேண்டுமா தேவை உனக்கும்
தாய்தந்தையருக்கும் ஒற்றுமை
காதல் வேண்டுமா தேவை உனக்கும்
அன்பு, ஒழுக்கத்திற்கும் ஒற்றுமை
இல்லறம் சிறக்க வேண்டுமா தேவை உனக்கும்
மனைவி மக்களுக்கும் ஒற்றுமை
ஊரும் உறவும் வேண்டுமா தேவை உனக்கும்
பன்பிற்கும் பணிவிற்க்கும் ஒற்றுமை
தேசம் போற்ற வேண்டுமா தேவை உனக்கும்
கடமைக்கும் ஒற்றுமை
இறை அருள் வேண்டுமா தேவை உனக்கும்
மதங்களுக்கும் ஒற்றுமை நீ வாழ
இத்தனை ஒற்றுமை தேவை உனக்கு
ஆதலால் உன் மனம் விரும்புவதேன் வேற்றுமை
இனியேனும் மனதில் மலரட்டும் ஒற்றுமை


நான் என்ற அகங்காரம் மனதில் குடிகொண்டிருக்கும்
வரை இறைவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை
உண்மையான அன்பு எல்லாவற்றையும் நேசிக்கும்
அன்புக்கு அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது

தன்னம்பிக்கை வளர

நான் தனித்தன்மை வாய்ந்தவன்.
என்னைப் படைத்தவனின் ஆற்றல் என்னில் நிறைந்திருக்கிறது.
எனக்கென்று ஒரு தனித்தன்மை படைக்கப்பட்டிருக்கிறது.
என்படைப்பில் ஏதோ குறிப்பிட்ட நோக்கமிருக்கிறது.
எனது சக்தி மனிதகுலத்திற்குப் பயன்படும்.
நான் வெற்றிபெற எனக்கு முழுத்திறமையும் படைக்கப்பட்டிருக்கிறது.
என்னுடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் எனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.
என்மீது எனக்கு முழுநம்பிக்கை இருக்கிறது. நான் பெருமைக்கும் சிறப்புக்கும் உரியவன் என்று நம்புகிறேன்.
என்னால் நல்லன எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்யமுடியும்.
எனது பிறவி ஆற்றலுக்குத் தேவையான அனைத்து சூழ்நிலைகளும் எனக்கு உருவாக்கிக் கொடுக்கப்படும்.
ஒவ்வொரு அணுப்பிறமான செயலிலும் இறைவனே என்னை வழிநடத்துகிறான்.

இறைவனே என்னை வழி நடத்துகிறார் என்று எப்பொழுதும் உங்களை நீங்களே நம்புங்கள்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னையே தான் தன் அறிவால்
அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தாணிருந்தானே.
-திருமூலர்-

அகத்தியர் காணும் உலகம்

உலகம் சமநிலை பெற வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
தேசம் யாவும் இணைந்திடவே
மார்க்கம் யாவும் சிறந்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே
அன்பும் அறிவும் கலந்திடவே
வையகம் அலகில் மலர்ந்திடவே
நெறியில் மனிதன் வாழ்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே
உலகம் சமநிலை பெற வேண்டும்
இறைவா அதைநீ தர வேண்டும்

வாருங்கள் அனைவரும் ஒன்று கூடுவோம்! புதியதோர் உலகம் காண்போம்.

         Copyright @ 2010 Siddhar ulagam, Ponnamaravathi www.go4property.com