Day: May 8, 2021

ஸ்ரீம் அன்னை ஆதி பராசக்தி சொர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

By Aathi Biravar in News on May 8, 2021

இந்த பீட திருப்பணி வேலைகள் 2015 ம் வருடம் கடைசகயில் தொடங்கி 2018 ம் வருடம் நவம்பர் மாதம் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது கிட்ட தட்ட 3 ஆண்டுகள் மிகுந்த சிரமப்பட்டு தான் முடித்தோம். நமது பீட ஆதிபராசக்தி, வாராஹி அம்மன் மற்றும் சொர்ண ஆகர்ஷண பைரவர், மகா கால பைரவர் படம் மற்றும் கும்பாபிஷேக, வருஷாபிஷேக அழைப்பிதழ்கள் கீழேயுள்ளது.

மேலும் நமது பீடத்தில் கன்னிமூலகணபதி, லெட்சுமி கணபதி என்று இரு கணபதியும் பழனி தண்டாயுதபாணியாக முருகனும், மகா மேருவுடன் அன்னை ஆதிபராசக்தியும், சொர்ண பைரவி அம்பாள் சமேதராக சொர்ண ஆகர்சன பைரவரும், காளி அம்சமாக பத்திரகாளி அம்மனும், குதிரை மேல் அமர்ந்த கோலத்தில் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனும், சபரிமலை சாஸ்தாவாக ஐய்யப்பனும், கால சக்கரத்துடன் மகா கால பைரவர் தனது நாய் வாகனத்துடன் உலகில் வேறெங்கும் கான முடியாத பைரவராக இங்கு அரசாட்சி செய்கின்றார், மேலு‌ம் நாக அம்சமாக ராகு, கேது சிலைகளும் இங்குள்ளது.

மேலும் நமது பீடத்தில் அமைய பெற்ற ஒவ்வொரு தெய்வ திருமேனிக்கும் மாதத்தில் ஒரு நாள் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டுமென தீர்மானித்து கன்னிமூலகணபதிக்கு சங்கடஹர சதர்த்தியும், லெட்சுமி கணபதிக்கு சுக்ல பட்ச சதுர்த்தியும், முருகனுக்கு விசாக நட்சத்திரமும், அன்னை ஆதிபராசக்திக்கு பொளர்ணமி பூஜை, தமிழ் மாத பிறப்பு, தமிழ் மாத கடைசி வெள்ளியும், வாராஹி அம்மனுக்கு வளர்பிறை, மற்றும் தேய்பிறை என்று இரு பஞ்சமி திதிகளும், சொர்ணாகர்ஷன பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி திதியும் மகா கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகளும் நடைபெற்று வருகின்றது.

மேலும் இங்குள்ள பத்திரகாளியம்மன் மற்றும் ஐயப்பனுக்கும் பொருளாதார சூழலுக்கேற்ப ஏதாவது செய்து கொண்டு இருக்கிறாம் இது வரையிலும் எந்த பூஜைக்கும் கட்டளைதாரர்கள் கிடையாது நமது பீடத்திற்கு வரும் பக்தர்களுக்காக தினமும் ஏதாவது ஒரு பிரசாதம் வழங்கி கொண்டு இருக்கிறாம்.

சென்ற வருட கொரனாவில் இருந்து சுக்ல பட்ச சதுர்த்தி, சுக்ல பட்ச அஷ்டமி, முருகனுக்குறிய விசாக நட்சத்திர பூஜைகள் எதுவும் நடத்த முடியவில்லை இதி்ல் என் உடல்நிலை வேர கொஞ்சம் சரி இல்லாத காரணத்தால் என்னால ஏதும் செய்ய முடியவில்லை.


மேலம் நமது பீடத்தில் பெரிய நிகழ்வாக சித்திரா பொளர்ணமி இந்த நாளில் அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்.

வைகாசி விசாகம் முருகனுக்குறிய விஷேச பிறந்த நாள் நட்சத்திரம் அன்றைய தினம் முருகனுக்கு விஷேச அபிஷேக அலங்கார என்று முருகனுக்கு சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.

ஆனி மாத அம்மாவாசையில் இருந்து 10 நாள் வாராஹி அம்மனுக்கு அஷடா நவராத்திரி விழா மிக சிறந்த முறையில் தினமும் யாக பூஜையுடன் நடைபெரும் இந்த பூஜையின் சிகர நிகழ்வாக 10ம் நாள் வாராஹி அம்மன் திருக்கல்யாணமும் அதோடு கல்யாண விருந்து சாப்பாட்டுடன் நிறைவு பெரும்.

ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று மூன்று அம்பாளுக்கம் ஆதிபராசக்தி, பத்திரகாளி, வாராஹி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று இரவு அன்னதானத்துடன் மினி கொடை மாதிரி நடைபெறும். ஆடி மாத வரும் ஒவ்வொரு செவ்வாயும், வெள்ளியும் அம்பாளுக்கு கூழ் அல்லது கஞ்சி காய்ச்சி பூஜைகள் நடைபெறும்.

ஆவணி மாதம் இரண்டு விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி பூஜை மிக சிறப்பாக நடைபெறும்.

புரட்டாசி மாதம் ஆதிபராசக்திக்கு 10 நாள் நவராத்திரி பூஜைகள் தினம் ஒரு அலங்காரத்துடன் மிக சிறப்பாக நடைபெறும்.

ஐப்பசி மாதம் நமது பீட வருஷாபிஷேகம் மிக சிறந்த முறையில் விஷேச ஹோமம், அபிஷேகம், அலங்காரம், பால்குடம் மூன்று வேலை அன்னதானத்துடன் மிக சிறப்பாக நடைபெறும்.


கார்திகை மாதம் பொளர்ணமி அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்காரம் முடித்து சொக்க பானை ஏற்றும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெறும். இந்த மாதம் பைரவர் பிறந்த அஷ்டமி வவருவதால இரு பைரவருக்கும் விஷேச ஹோமம்,அபிஷேக ,அலங்காரத்துடன் அன்ன படையலுடன் அன்னதானமும் நடைபெறும் .


மார்கழி மாதம் தினமும் அதி காலை 03 : 00 மணிக்கு கோயில் நடை திறந்து பிரம்ம முகூர்த்தத்தில் தினமும் இரண்டு பிரசாதங்கள் போட்டு மார்கழி மாதம் முழுக்க சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.

தை மாதம் பிறப்பு பொங்கல் வைக்கும் வைபவம் மற்றும் மதியம் அன்ன படைப்பு மிக சிறப்பாக நடைபெறும். மேலும் தை மாத எல்லா வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்.

மாசி மாதம் வரும் சிவராத்திரி 4 கால பூஜையும், மாசி மகம் அன்றும் அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்.

பங்குனி மாத வருகின்ற உத்திர நட்சத்திரத்தில் ஐயப்பனுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்

இதெல்லாம் வருடம் ஒரு முறை நடக்கும் பூஜைகள் இந்த நாள்ல மாத பூஜைகள் பஞ்சமி, சதுர்த்தி, அஷ்டமி பூஜைகள் வந்தாலும் அதுவும்கூட தனியாக நடைபெறும்.
இதில் எந்த விதமான பூஜைக்கும் கட்டளைதாரர்கள் கிடையாது கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அறக்கட்டளை ஆரம்பித்தால் உதவிகள் கிடைக்கும் என்றார்கள் 2019ம் வருடம் 7வது மாதம் ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வாராஹி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையும் தொடங்கி நடத்தி வருகின்றோம் இது வரையிலும் எந்த உதவியும் வரவேயில்லை.

மேலும் நமது பீடத்திற்காக ஆதிபராக்தி அம்மன் மகா மேருவுடன், அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன், சொர்ணாகர்ஷன பைரவர், மகா கால பைரவர் ஆகிய திருமேனிகளுக்கு ஐம்பொன் உற்சவர் சிலை செய்ய தீர்மானித்தோம் இதில் முதலில் மஹா வாராஹி அம்மன் உற்சவர் ஐம்பொன் சிலை செய்ய ஆகும் பணம் அனைத்தும் தான் ஒருவர் மட்டுமே மொத்தமாக தருகிறேன் என்று கோயமுத்தூரில் உள்ள அன்பு பக்தைய் வெண்ணிலா நாகராஜன் ஏற்றுக் கொண்டார் . அந்த வாராஹி அம்மனை பிராண பிரதிஷ்ட செய்யலாம் என முடிவெடுக்கும் போது வாராஹி அம்மன் தனது ஜோடி உன்மத்த பைரவருடன் தான் அமர்வேன் என கூறினால் இதற்காக இப்பொழுது உன்மத்த மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என இரு உற்சவ ஐம்பொன் சிலைகள் செய்வதற்காக முதல்ல மெழுகு உருவ மாதிரி சிலை செய்து ரெடியாக உள்ளது மெட்டல் வாங்கினால் உடனடியாக உருக்கி ஊற்றி ஐம்பொன் சிலை ரெடி ஆனால் கையில் பணம் இல்லை பக்தர்கள் உதவினால் உடனடியாக இரு பைரவர்களும் ரெடியாகி விடுவார்கள் எனது முகநூலில் 5000 நண்பர்களும் மேலும் வெய்டிங் லிஸ்ட்ல 1000 நபரும் இருக்கின்றனர் ஆளுக்கு Rs.100 கொடுத்தாலும் இதற்க்குள் வேலைய முடித்து பைரவர் சிலையை கொண்டு வந்திருக்கலாம்.
நண்பர்களே தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து பைரவர் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் நமது பீடத்திற்காக தாயாராகி கொண்டிருக்கும் இரு பைரவர்களின் மெழுகு மாதிரி டைமேக்கிங் சிலை படம் கீழே உங்க பார்வைக்காக கொடுக்கிறேன்.

SrimMahesh Samyji #0m_siva_siva_om

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி விசாக பூஜை 25.05.2021 செவ்வாய் கிழமையன்று காலை 11:00 மணிக்கு மேல் மிக சிறப்பாக நடைபெற்றது.

நமது பீடத்தில் முருகனுக்கு பிறந்த நாளான இன்று 25.05.2021 செவ்வாய்கிழமை வைகாசி விசாக நட்சத்திர பூஜை பக்தர்களின் ஒத்துழைப்போடு மிக சிறப்பாக நடைபெற்றது.

அந்த பூஜையில் நடைபெற்ற நமது பீட முருகன் பழநி தண்டாயுதபாணியின் அபிஷேகம், அலங்காரம், மற்றும் விசேஷ அன்னப் படைப்பு பூஜைகள் உங்களுக்காக

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

பொளர்ணமி பூஜை

தல வரலாறு

By Biravar in News on May 8, 2021

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி பெருநகரம் விஸ்வபுரம் ஸ்ரீம்.மகேஷ் சுவாமிஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம் என்பது அங்கு அமர்ந்து அருளாட்சி செய்யும் ஆதிபராசக்தி அம்மன் மகேஷ் சுவாமிஜீ கனவில் அடிக்கடி வந்து எனக்கு உன் சொந்த வீடானது நான் முதன்முதலில் குடியிருந்த இடம் அங்கு என்கொரு அலயம் வேண்டும்மென்று அடிக்கடி என்னை தூங்க விடாத அளவில் கேட்டுக் கொண்டே இருந்தால் நான் வீட்டில் சொன்னேன் யாருமே அதற்க்கு ஒத்துழைக்கவில்லை அந்த வீடு 2010ல் தான் எல்லாம் தரைமட்டமாக இடித்து புதிதாக வாடகைக்கு விடும் படி வடிவமைத்து கட்டப்பட்டது அந்த வீட்டிலிருந்து மாதம் Rs.24000/- இருபத்திநான்காயிரம் ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்தது அந்த இடத்துல தான் இந்த அம்மா ஆலயம் கேட்க்க எனக்கு என்ன செய்ய என்று குழம்பிய நின்றேன் பிறகு கல்யாணம்மாகி பல வருடங்களாக குழந்தை இல்லாத நபருக்காக குழந்தை கொடு நான் சொந்தமாகவே உனக்கு ஆலயம் கட்டுகிறன் என்றேன் நீ வேலைக்கு இந்த நாளில் நாள் செய் நான் குழந்தை தருகிறேன் என்றால் நானும் ஒவ்வொரு கொத்தனாரா கூப்பிட்டுக் கேட்டேன் ஒவ்வொருத்தரும் வெவ்வேரு ஐடியா சொன்னார்கள் அனால் கையில் ஒன்றும் இல்லை இங்கு ஒரு பிள்ளையார் ஆதிபராக்தி சொர்ண ஆகர்சன பைரவர் வைப்பது என தீர்மானித்தோம் கட்டிட வேலைக்காக மட்டும் கடைசியாக ஒருவர் 3லட்சம் கொடுங்க நான் செய்கிறேன் என வந்து பேசி 5000/- அட்வான்ஸ் வாங்கி சென்றார் ஆனால் அவரால் வரவே முடியவில்லை பிறகு இன்னொரு கோயிலில் ஒரே பிரச்சனை என வந்தார்கள் அங்கே அந்த முத்தாரம்மன் கோயில் பிரச்சினையைய் சரி செய்தேன் அந்த கோயில் நிர்வாகி நான் வந்து வேலை செய்கிறேன் என வந்து வேலைய தொடங்கினார் வேலைகள் நான் அங்கே இருந்தால் தான் நடக்கும் எக்கச்சக்க பிரச்சினை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சாமியும் காளி முருகர் என எனக்கும் இங்கே இடம் வேண்டும் என்றனர் சரி என்று மைலாடியில் விநாயகர் லெட்சுமிகணபதியாகவும் முருகர் தண்டாயுதபாணியாவும் காட்சி அளித்தார்கள் அதேமாதிரியும் ஆதிபராசக்தி, மகாமேரு சொர்ண ஆகர்சன பைரவர் ஆகிய சிலைகள் ஆடர் கொடுத்து செய்ய சொல்லி அங்கே அந்த வேலையும் நிறைவுற்றது ஆனால் கட்டிட வேலை மட்டும் முடிந்தபாடில்லை 3லட்சத்துக்கு தொடங்கிய வேலை 12லட்சமாகியும் முடியவில்லை இதற்க்காக யாரிடமும் யாசிக்கவில்லை கடன் பட்டும் வேலைகள் முடியவில்லை பிற்கு தான் ஒரு 5000 நோட்டிஸ் அடித்தோம் அதுவும் எந்த உபகாரமும் இல்லை.

அதன் பிறகு கொஞ்ச நாள் வேலை ஏதும் செய்யவில்லை கையிலும் ஒன்றும் இல்லை இந்த கால கட்டத்தில் மைலாடியில் செய்த முருகன் சிலை உடைந்து விட்டது பிறகு முருகன் சிலை செய்ய வேண்டுமென செங்கோட்டையில் ஆர்டர் கொடுத்தேன் அங்கு அவங்க வேலை மிக சிறப்பாக இருக்க கஜலட்சுமி 2 கன்னி மூலையில் விநாயகர் வருவேன் என்றார் கன்னி விநாயகர் ஒன்றும் செய்தோம் இத்துடன் முடித்து கும்பாபிஷேகம் போய் விடலாம் என இருந்தோம் கையில பணம் ஒன்றும் இல்லாமல் வேலை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்க்குள் நம் தாய் வாராஹி குதிரை மேல் காட்சி கொடுத்து இந்த கோலத்தில் நானும் இங்கே அஷ்வாரூட மகா வாராஹியாக இங்கே அமர வேண்டும் என கட்டளையிட்டால் நான் அம்மா தாயே உன்னை வைத்து என்னால் பராமரிக்க முடியாது என்று நான் அமைதியாக இருக்க சினைபன்றி வடிவில் கோயிலுக்குள் வந்து படுத்து கொண்டு குட்டிய போட்டு அந்த இடத்துல இருந்து பன்றியைய் விரட்டியடிக்க படாத பாடு பட்டேம் அதன் பிறகு தான் நான் வாராஹி அம்மனைய் ஆலயத்தில் வைக்க சம்மதித்தேன்.
ஆதாடு என் அப்பன் மகா கால பைரவர் காலசக்கரத்துடன் வாகனத்தோடு காட்சி கொடுத்தார் அத்துடன் சபரிமலை சாஸ்தா ஐயப்பனும் நானும் இந்த இடத்தில் அமர்வேன் என்றும் கேட்டதற்காக செங்கோட்டை ஸ்தபதியிடம் நான் கண்ட காட்சியைய் சொல்லி அதே போல அவர் மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வாராஹி சபரிமலை சாஸ்தா ஐயப்பன் ஆகிய சுவாமி சிலைகளைய் செய்து கொடுத்தார் அட்வான்ஸ் கொடுக்காமலே வேலைய் செய்தார் வேலை முடித்த பிறகு தான் பணம் கொடுத்து சிலைகளைய் எடுத்து வந்தேன் ஒரு மாதிரியா வேலை எல்லாம் முடித்து கும்பாபிஷேக நாள் குறித்து பத்திரிக்கை எல்லாம் அடித்து கும்பாபிஷேகத்திற்க்கு தான் என் முகநூல் அன்பர்கள் உதவிகள் கொஞ்சம் கிடைத்தது மொத்தத்தில் அந்த கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்குள் கிட்டத்தட்ட 22 லட்ச ரூபாய் கடனாகித்தான் இந்த ஆலய வேலைகளைய் பூர்த்தி செய்தேன்.

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி

By Biravar in Events on May 8, 2021

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி பைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்

ஆகமங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் தெள்ளத் தெளிவாக விளங்கும்.

அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர்.

நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.

சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.

தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.

அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியபிராமாணம் பெற்றுக் கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான், ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.