வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை
By Biravar in Events on June 3, 2021
இன்று நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை இன்று 02.06.2021 புதன் கிழமையன்று நண்பகல் 11:30 மணிக்கு மேல் நமது பீட மகா கால பைரவருக்கு விஷேச அபிஷேகங்கள், அலங்காரம் தீபாரதனை பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்ற காட்சிகள்.
உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்கை வாழ வேண்டுமென நமது பீட மகா கால பைரவரிடமும் வேண்டி இன்று தேய்பிறை புதாஷ்டமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.
இது கொரோனா காலம் என்பதால் பக்தரகள் அனுமதி இல்லை என்பதால் மிகவும் சிரமமான சூழலுக்கேற்ப இந்த பூஜைகள் நடைபெறுகின்றன
இந்த சூழலுக்கேற்ப பக்தர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே பைரவரையும் அவருடைய பூஜைகளையும் பார்க்க வேண்டுமென இந்த சூழலிலும் இடைவிடாது பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி
ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.
ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை