Author: Biravar

வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை

By Biravar in Events on June 3, 2021

இன்று நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை இன்று 02.06.2021 புதன் கிழமையன்று நண்பகல் 11:30 மணிக்கு மேல் நமது பீட மகா கால பைரவருக்கு விஷேச அபிஷேகங்கள், அலங்காரம் தீபாரதனை பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்ற காட்சிகள்.

உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்கை வாழ வேண்டுமென நமது பீட மகா கால பைரவரிடமும் வேண்டி இன்று தேய்பிறை புதாஷ்டமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

இது கொரோனா காலம் என்பதால் பக்தரகள் அனுமதி இல்லை என்பதால் மிகவும் சிரமமான சூழலுக்கேற்ப இந்த பூஜைகள் நடைபெறுகின்றன

இந்த சூழலுக்கேற்ப பக்தர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே பைரவரையும் அவருடைய பூஜைகளையும் பார்க்க வேண்டுமென இந்த சூழலிலும் இடைவிடாது பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வைகாசி மாத அஷ்டமி சதாசிவாஷ்டமி

By Biravar in News on June 3, 2021

☘☘☘☘☘☘☘☘

பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.

பைரவருக்குண்டான பொது காயத்ரி

சுவாநத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத்

பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

☘️
புதன்கிழமை அன்று ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.
☘️

புதன்கிழமை மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரகாரர்கள் இந்த கிழமையில் பைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். புதன் கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

சொர்ண பைரவ மந்திர ரகசியம்!

சொர்ண பைரவரின் மந்திரம் ஒன்றினை பகிர்ந்து கொள்கிறேன். இந்த மந்திரம் அகத்தியரால் தனது “அகத்தியர் பரிபாஷை” என்னும் நூலில் அருளப் பட்டிருக்கிறது. தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முயற்சியில் சுணங்கியிருப்போருக்கும் இந்த மந்திரம் உதவுமென்கிறார் அகத்தியர்.

இந்த மந்திரத்தின் மகிமையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

தான்பார்க்குந் தொழிற்கெல்லாம் வயிரவனும்வேணும்
தன்மையுடன் தொட்டதெல்லாம் பலிக்கும்பாரே
மான்பார்த்த சிவகிருபை யிருந்துதானால்
மக்களே செய்தொழிலும் பங்கமாமோ
கோன்பார்த்தக் குருமுடிக்க அருகில்நின்று
குணங்குறிகள் தவறாமல் மனதிற்றோணி
வான்பார்த்த கருவெல்லாம் வெளியதாக
மக்களே தோணுமடா மகிழ்ந்துபாரே.

செய்யும் தொழில்கள் எல்லாவற்றிற்கும் சொர்ணபைரவர் அருள் வேண்டுமாமாம். அப்படி அவர் மந்திரம் சித்தித்தால் தொட்டதெல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர். மேலும் சிவபெருமானின் கருணை இருந்தால் செய்யும் தொழிலில் பங்கமே வராது என்கிறார். அதற்கு வைரவர் துணை என்றென்றும் வேண்டும். செய்தொழிலில் குணம் குறைகள் மனதில் தோன்றி தவறுகள் நேராது காக்க இந்த மந்திரம் உதவுமென்கிறார். அத்துடன் எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தோன்றும் மகிழ்ந்து பார் என்றும் சொல்கிறார்.

இத்தனை சிறப்பு வாய்ந்த மந்திரம் என்ன?.அதை எப்படி பயன் படுத்துவது என்பதை பின்வருமாறு அருளுகிறார்.

பண்ணப்பா சொர்ணவயி ரவன்றன் பூசை
பாங்கான மந்திரத்தைச் சொல்லக் கேளு
எண்ணப்பா ஓங்கென்றும் ஸ்ரீங்கென்றுந்தான்
என்முன்னே சொர்ணரூபா வாவாவென்றும்
கண்ணப்பா நானெடுத்த கருவெல்லாந்தான்
கைவசமாய்ச் செய்துவைக்க வாவாவென்று
சண்ணப்பா நூற்றெட்டு உருவேயானால்
தன்வசமாய் போகுமடா தான்பார்ப்பீரே.

“ஓங் ஸ்ரீங் என் முன்னே சொர்ணரூபா வாவா. நான் எடுத்த கருவெல்லாம் கைவசமாய் செய்து வைக்க வாவா” என்பதுதான் சொர்ண பையிரவரின் மந்திரம். இதனை நூற்றி எட்டு உரு செபித்தால் மந்திரம் சித்தியாகுமாம் என்கிறார்.

மேலும் இந்த மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
அல்லதா லின்னூலே சொல்லும்பாரே.

சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்… குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து சொல்லும் என்றும் சொல்கிறார்.

எனவே, எல்லாம் வல்ல குருநாதரை மனதில் தியானித்து மிகவும் எளிதான இந்த மந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் பெற குருவருள் துணை நிற்கட்டும்.

மேலு‌ம் நமது தூத்துக்குடி மாநகரம் விஸ்வபுரம் முதல் தெருவில் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பெரும் பைரவர்கள் அரசாட்சி செய்கிறார்கள் இந்த இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கும் புதிதாக ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்திகள் செய்ய வேண்டி உள்ளது
அதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்து இந்த பைரவ திருமேனிகள் செய்ய உதவலாம் இதன் மூலமாகவும் உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் இந்த பைரவர்கள் அருளால் உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறையினர்க்கும் இந்த பைரவர் இருக்கும் காலம் வரை புண்ணியம் கிடைக்கும்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on June 1, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை இன்று 30.05.2021 ஞாயிற்றுக் கிழமையன்று நண்பகல் 01:00 மணிக்கு மேல் நமது தாய் அன்னை அஷ்வாரூட மகா வாராஹி அம்மனுக்கு விஷேச அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாரதனை பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்ற காட்சிகள்.

உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்கை வாழ வேண்டுமென நம் தாய் அன்னை அஷ்வாரூட மகா வாராஹி அம்மனிடம் வேண்டி இன்று தேய்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

இது கொரோனா காலம் என்பதால் பக்தரகள் அனுமதி இல்லை என்பதால் மிகவும் சிரமமான சூழலுக்கேற்ப இந்த பூஜைகள் நடைபெறுகின்றன

ஓம் ஸ்ரீம் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனே போற்றி போற்றி !!!

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி !

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.!

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வாழ்க_வளமுடன்

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

பௌர்ணமி பூஜை

By Biravar in Events on May 29, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி அனுச நட்சத்திரமும் பொளர்ணமியும் இணைந்த பௌர்ணமி பூஜை இன்று 26.05.2021 புதன் கிழமையன்று மாலை 06:00 மணிக்கு நமது தாய் அன்னை ஆதிபராசக்தி, சொர்ணாகர்ஷன பைரவருக்கு விஷேச அபிஷேக அலங்காரம் மற்றும் பூஜை தீபாராதனைகள் மிக சிறப்பாக நடைபெற்ற காட்சிகள்.

உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்கை வாழ வேண்டுமென நம் அன்னை ஆதிபராசக்தியிடமும், சொர்ண ஆகர்சன பைரவரிடமும் வேண்டி இன்று பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

இது கொரோனா காலம் என்பதால் பக்தரகள் அனுமதி இல்லை என்பதால் மிகவும் சிரமமான சூழலுக்கேற்ப இந்த பூஜைகள் நடைபெறுகின்றன

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வாழ்க_வளமுடன்

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

விசாக நட்சத்திர பூஜை

By Biravar in Events on May 26, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி விசாக பூஜை 25.05.2021 செவ்வாய் கிழமையன்று காலை 11:00 மணிக்கு மேல் மிக சிறப்பாக நடைபெற்றது.

நமது பீடத்தில் முருகனுக்கு பிறந்த நாளான இன்று 25.05.2021 செவ்வாய்கிழமை வைகாசி விசாக நட்சத்திர பூஜை பக்தர்களின் ஒத்துழைப்போடு மிக சிறப்பாக நடைபெற்றது.

உலக மக்கள் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபடும் பொருட்டு நமது பீட முருகனுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்றன

அந்த பூஜையில் நடைபெற்ற நமது பீட முருகன் பழநி தண்டாயுதபாணியின் அபிஷேகம், அலங்காரம், மற்றும் விசேஷ அன்னப் படைப்பு பூஜைகள் உங்களுக்காக

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

அஷ்வாரூட மகா வராஹி வளர்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on May 14, 2021

SrimMahesh Samyji #om_siva_siva_om

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில்
16 – 05 – 2021 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி புனர்பூச நட்சத்திரத்தில் அன்று நண்பகல் 01 – 00 மணிக்கு மேல் அஷ்வாரூட மகா வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

https://www.youtube.com/watch?v=nnisak9YmXQ

உலகில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகின்றது இதில் இருந்து உலக மக்களைய் காக்கும் பொருட்டும் உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு உலக மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் பொருட்டு நம் தாய் வாராஹி அம்மனுக்கு அன்று விசேஷ பூஜைகள் நடைபெற இருக்கின்றது.

இது கொரோனா காலம் இந்த பூஜை மிக சிறப்பாக நடைபெற பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து அஷ்வாரூட மகா வராஹி அம்மன் அருளைய் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

நம் வாழ்வில் அனைத்துக்கும் ஆதியே வாராகி தான்..

அஷ்டவாராகி_வழிபாடு

ஶ்ரீ வாராஹி தேவியின் உபாசனை என்றால் ஏதோ மின் அணு உலையில் பார்க்கும் பணியை போல மக்கள் அஞ்சுவர். அத்தகைய உக்ரமும் கருணையும் உருவான தேவ உடலும் மிருக பலமும் கொண்ட ஶ்ரீ வாராஹி அமைதியுடனும் பயபக்தியுடனும் தூய்மையாக வழிபடும் பக்தர்கள் மனத்தில் “அஹமித்யேவ பவாநீம் ” என்பதற்கு ஏற்ப வஜ்ர வாராகியாக மனத்தின் உள்ளே அரூபமாக உறையும் பெருந்தேவதை..

மனிதகுலத்தின் இன்னல்களுக்கு காரணமாக விளங்குகிற மூன்று கிரகங்கள் ராகு கேது சனி ஆவர்.. மகிஷம் கருமையான சனியின் அம்சம்.. எதுவெல்லாம் பூமியை கீருமோ , பிளக்குமோ அதுவெல்லாம் கேதுவின் அம்சம்… கலப்பை மண்ணை பிளக்கும் கேது ஆவான் ..

பொருட்களை இடித்து தூளாக்கும் அனைத்தும் ராகுவின் அம்சம்.. உலக்கையே ராகு ஆவான்..

ராகுவையும் , கேதுவையும் ஆட்டிவைத்து சனியை வாகனமாக்கி அதிலேறி வரதமும் அபயமும் தந்து பக்தர்களின் துயரத்தை தீர்ப்பவளே இந்த வாராகி எனும் தெய்வம் ..

வஜ்ர தந்த பற்களால் பகைஞர்தம் உடலை பிளந்து குருதி குடித்து ரத்த திலகமிட்டு குடல்மாலை பூண்டு மது மாமிசம் புசிக்கும் அகோரி திகம்பரி சிம்மாரூடாவும் இவளே..

இவளது உக்ர பிரளய வடிவத்தையோ , இவளுடைய மாமிச நைவேத்ய பொருட்களையோ நிந்தனை செய்தவர் , இவளை பற்றிய பேச்சுகளை எதிர்த்து நின்று சரியாக வாதாடும் பாவிகள் அனைவரும் சூலத்திற்கு இரையாவதில் ஐயமில்லை ..

எனவே வாராஹியிடம் இக்குணம் படைத்தோர் சற்று ஒதுங்கி இருங்கள் ..

சாக்த மார்க்கத்தில் இவள் போல ஒரு காருண்யமும் இல்லை .. பிரளயமும் இல்லை ..

நினைத்து பார்த்த மாத்திரத்தில் கண்முன்னே சட்டென்று காட்சி தருபவள் #அஸ்வாரூடா வாராகி.. இவளோ வெண்குதிரை மீது யௌவனவதியாக பேரழகுடன் காற்றாக பறப்பவள்… மும்மடிப்புடைய இடையுடன் சர்வ நவரத்தினங்கள் ஆபரணங்கள் தரித்து வரும் அநாதரட்சகி .. இவளை நள்ளிரவு ஆராதனை செய்யும் பக்தர்கள் காதில் பன்றி உருமலுடன் தான் நேரில் பிரத்யட்சமாக வந்திருப்பதை தெரிவிப்பாள் ..

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

மகா சித்தர் தவ பீடத்தை வலைத்தளம் மூலமாக தொடர்புகொள்ளலாம் .

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

தல வரலாறு

By Biravar in News on May 8, 2021

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி பெருநகரம் விஸ்வபுரம் ஸ்ரீம்.மகேஷ் சுவாமிஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம் என்பது அங்கு அமர்ந்து அருளாட்சி செய்யும் ஆதிபராசக்தி அம்மன் மகேஷ் சுவாமிஜீ கனவில் அடிக்கடி வந்து எனக்கு உன் சொந்த வீடானது நான் முதன்முதலில் குடியிருந்த இடம் அங்கு என்கொரு அலயம் வேண்டும்மென்று அடிக்கடி என்னை தூங்க விடாத அளவில் கேட்டுக் கொண்டே இருந்தால் நான் வீட்டில் சொன்னேன் யாருமே அதற்க்கு ஒத்துழைக்கவில்லை அந்த வீடு 2010ல் தான் எல்லாம் தரைமட்டமாக இடித்து புதிதாக வாடகைக்கு விடும் படி வடிவமைத்து கட்டப்பட்டது அந்த வீட்டிலிருந்து மாதம் Rs.24000/- இருபத்திநான்காயிரம் ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்தது அந்த இடத்துல தான் இந்த அம்மா ஆலயம் கேட்க்க எனக்கு என்ன செய்ய என்று குழம்பிய நின்றேன் பிறகு கல்யாணம்மாகி பல வருடங்களாக குழந்தை இல்லாத நபருக்காக குழந்தை கொடு நான் சொந்தமாகவே உனக்கு ஆலயம் கட்டுகிறன் என்றேன் நீ வேலைக்கு இந்த நாளில் நாள் செய் நான் குழந்தை தருகிறேன் என்றால் நானும் ஒவ்வொரு கொத்தனாரா கூப்பிட்டுக் கேட்டேன் ஒவ்வொருத்தரும் வெவ்வேரு ஐடியா சொன்னார்கள் அனால் கையில் ஒன்றும் இல்லை இங்கு ஒரு பிள்ளையார் ஆதிபராக்தி சொர்ண ஆகர்சன பைரவர் வைப்பது என தீர்மானித்தோம் கட்டிட வேலைக்காக மட்டும் கடைசியாக ஒருவர் 3லட்சம் கொடுங்க நான் செய்கிறேன் என வந்து பேசி 5000/- அட்வான்ஸ் வாங்கி சென்றார் ஆனால் அவரால் வரவே முடியவில்லை பிறகு இன்னொரு கோயிலில் ஒரே பிரச்சனை என வந்தார்கள் அங்கே அந்த முத்தாரம்மன் கோயில் பிரச்சினையைய் சரி செய்தேன் அந்த கோயில் நிர்வாகி நான் வந்து வேலை செய்கிறேன் என வந்து வேலைய தொடங்கினார் வேலைகள் நான் அங்கே இருந்தால் தான் நடக்கும் எக்கச்சக்க பிரச்சினை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சாமியும் காளி முருகர் என எனக்கும் இங்கே இடம் வேண்டும் என்றனர் சரி என்று மைலாடியில் விநாயகர் லெட்சுமிகணபதியாகவும் முருகர் தண்டாயுதபாணியாவும் காட்சி அளித்தார்கள் அதேமாதிரியும் ஆதிபராசக்தி, மகாமேரு சொர்ண ஆகர்சன பைரவர் ஆகிய சிலைகள் ஆடர் கொடுத்து செய்ய சொல்லி அங்கே அந்த வேலையும் நிறைவுற்றது ஆனால் கட்டிட வேலை மட்டும் முடிந்தபாடில்லை 3லட்சத்துக்கு தொடங்கிய வேலை 12லட்சமாகியும் முடியவில்லை இதற்க்காக யாரிடமும் யாசிக்கவில்லை கடன் பட்டும் வேலைகள் முடியவில்லை பிற்கு தான் ஒரு 5000 நோட்டிஸ் அடித்தோம் அதுவும் எந்த உபகாரமும் இல்லை.

அதன் பிறகு கொஞ்ச நாள் வேலை ஏதும் செய்யவில்லை கையிலும் ஒன்றும் இல்லை இந்த கால கட்டத்தில் மைலாடியில் செய்த முருகன் சிலை உடைந்து விட்டது பிறகு முருகன் சிலை செய்ய வேண்டுமென செங்கோட்டையில் ஆர்டர் கொடுத்தேன் அங்கு அவங்க வேலை மிக சிறப்பாக இருக்க கஜலட்சுமி 2 கன்னி மூலையில் விநாயகர் வருவேன் என்றார் கன்னி விநாயகர் ஒன்றும் செய்தோம் இத்துடன் முடித்து கும்பாபிஷேகம் போய் விடலாம் என இருந்தோம் கையில பணம் ஒன்றும் இல்லாமல் வேலை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்க்குள் நம் தாய் வாராஹி குதிரை மேல் காட்சி கொடுத்து இந்த கோலத்தில் நானும் இங்கே அஷ்வாரூட மகா வாராஹியாக இங்கே அமர வேண்டும் என கட்டளையிட்டால் நான் அம்மா தாயே உன்னை வைத்து என்னால் பராமரிக்க முடியாது என்று நான் அமைதியாக இருக்க சினைபன்றி வடிவில் கோயிலுக்குள் வந்து படுத்து கொண்டு குட்டிய போட்டு அந்த இடத்துல இருந்து பன்றியைய் விரட்டியடிக்க படாத பாடு பட்டேம் அதன் பிறகு தான் நான் வாராஹி அம்மனைய் ஆலயத்தில் வைக்க சம்மதித்தேன்.
ஆதாடு என் அப்பன் மகா கால பைரவர் காலசக்கரத்துடன் வாகனத்தோடு காட்சி கொடுத்தார் அத்துடன் சபரிமலை சாஸ்தா ஐயப்பனும் நானும் இந்த இடத்தில் அமர்வேன் என்றும் கேட்டதற்காக செங்கோட்டை ஸ்தபதியிடம் நான் கண்ட காட்சியைய் சொல்லி அதே போல அவர் மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வாராஹி சபரிமலை சாஸ்தா ஐயப்பன் ஆகிய சுவாமி சிலைகளைய் செய்து கொடுத்தார் அட்வான்ஸ் கொடுக்காமலே வேலைய் செய்தார் வேலை முடித்த பிறகு தான் பணம் கொடுத்து சிலைகளைய் எடுத்து வந்தேன் ஒரு மாதிரியா வேலை எல்லாம் முடித்து கும்பாபிஷேக நாள் குறித்து பத்திரிக்கை எல்லாம் அடித்து கும்பாபிஷேகத்திற்க்கு தான் என் முகநூல் அன்பர்கள் உதவிகள் கொஞ்சம் கிடைத்தது மொத்தத்தில் அந்த கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்குள் கிட்டத்தட்ட 22 லட்ச ரூபாய் கடனாகித்தான் இந்த ஆலய வேலைகளைய் பூர்த்தி செய்தேன்.

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி

By Biravar in Events on May 8, 2021

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி பைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்

ஆகமங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் தெள்ளத் தெளிவாக விளங்கும்.

அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர்.

நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.

சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.

தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.

அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியபிராமாணம் பெற்றுக் கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான், ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

தேய்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on April 29, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில்
01 – 05 – 2021 சனிக்கிழமை பஞ்சமி திதி மூலம் நட்சத்திரத்தில் இன்று நண்பகல் 01 – 00 மணிக்கு மேல் அஷ்வாரூட மகா வராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

உலகில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகின்றது இதில் இருந்து உலக மக்களைய் காக்கும் பொருட்டு நம் தாய் வாராஹி அம்மனுக்கு இன்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது.

அந்த பூஜையில் நடைபெற்ற அஷ்வாரூட மகா வராஹி அம்மனின் அபிஷேக அலங்காரம் மற்றும் திப ஆராதனை காட்சிகள்.

பைரவர்பற்றிய அபூர்வதகவல்கள் மற்றும் பைரவமுகூர்த்தம்

By Biravar in News on April 28, 2021

24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது.

சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும்.

அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணப்படும் இந்த அற்புத அமிர்த நேரத்தை முதன்முதலாக உலகிற்கு வழங்கியவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்த நற்காரியத்திற்கும் முகூர்த்தம் லக்ன நேரம் குறித்துதான் காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், போதிய ஜோதிட ஞானம் இல்லாதோரும் சூழ்நிலை காரணங்களால் இத்தகைய முகூர்த்த லக்னங்களில் நற்காரியங்களை நிகழ்த்த இயலாதபோது மேற்கூறிய முகூர்த்தங்கள் நற்காரிய சித்தி அளிக்கவல்லதாய் அமைகின்றன. சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை உடையதே அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும்.

இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு. அவ்வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு ஒரளவு பரிகாரமாக அமைகின்றன. சித்தர்கள் அருளிய பைரவ முகூர்த்த நேரத்தைக் குறிப்பதே பைரவ மூர்த்திகளின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாய்களின் வால் பகுதியாகும். எந்த அளவிற்கு பைரவ மூர்த்திகளின் வாகனங்களின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பைரவ முகூர்த்தத்தைப் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து உணர்ந்து அதை நற்காரிய சித்திக்குப் பயன்படுத்த முடியும் என்பது சித்தர்களின் அறிவுரை,பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் விரவி உள்ளது? பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில் நான்கு கால்களில் திரமாக நின்ற தர்ம தேவதை தற்போதைய கலியுகத்தில் ஒரே ஒரு காலில் மட்டும்தான் நிற்கின்றது. எனவேதான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தகாத நிகழ்ச்சிகளையே நாம் சந்திக்கிறோம்.இத்தகைய தகாத நிகழ்ச்சிகள் நம்மைத் தாக்காது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தர்ம தேவதையின் ஆசீர்வாத சக்திகளை நாம் பெற்றாக வேண்டும். கலியுகத்தில் பூமியில் நிலை கொண்டிருக்கும் தர்ம தேவதையின் நாலாவது கால்தான் பைரவ வாகனத்தின் வால் பகுதியாகும். நாம் பைரவ வாகனத்தின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகள் இயற்றும் அளவிற்கு நாம் தர்ம தேவதையின் அனுகிரக சக்திகளைப் பெற்றவர்கள் ஆகிறோம்.பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.

உதாரணமாக,பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை இந்த பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள், பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள், அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள் இவற்றை இத்தகைய பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.

கணவன் மனைவி இவர்களுக்கு இடையே உள்ள தாம்பத்திய உறவிற்கு இரவு நேரமே ஏற்றது. பகல் நேர புணர்ச்சி நரம்புக் கோளாறுகளையும் சந்ததிகளின் அவயவ குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்,அதே போல பகலில் தூங்குவதும் உட்கார்ந்த, நின்ற நிலையில் தூங்குவதும் உடல் நலத்திற்கு உகந்ததன்று. இரவு நேர எண்ணெய்க் குளியலும் ஆரோக்கியத்தை அளிக்காது.இரவு நேரப் பயணங்களும், இரவில் நெடு நேரம் கண் விழித்லும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.இது போன்ற பகலிரவு கர்ம மாறுபாடுகளில் ஏற்படும் தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதே தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் வழிபாடாகும்.

பைரவ வாகன மூர்த்திகளின் வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும். இத்தகைய வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு, பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார்.
நீதிபதிகள், ஆட்சியாளர்கள், மந்திரிகள் திடீரென்று பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை இழந்து வாடும்போது அவர்களை இதுவரை அண்டியிருந்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மறைந்து விடுவார்கள். இது அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகும். ஆனால், இத்தகைய துன்பங்களால் பாதிக்கப்படும்போதுதான் அதன் உண்மை வேதனை புரிய வரும். இத்தகைய எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக் கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லதே தர்மக் கொடி பைரவ மூர்த்தியின் வழிபாடாகும்.

பைரவ மூர்த்திகளின் வாகனங்கள் வலது புறம் நோக்கியும் இடது புறம் நோக்கியும் பார்த்தவாறு அமைவதுண்டு. பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.எண்ணிக்கை குறைவு, அடர்த்திக் குறைவு போன்ற விந்துக் குற்றங்களால் அவதியுற்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக் கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் இறைப் பிரசாதமாக கிட்ட வாய்ப்புண்டு.

இரத்தச் சோகை, கர்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக் கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார்.

வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.

இது சிறு குறிப்பு மட்டுமே.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

மேலு‌ம் நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பெரும் பைரவர்கள் அரசாட்சி செய்கிறார்கள் இந்த இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கும் புதிதாக ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்திகள் செய்ய வேண்டி உள்ளது
அதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்து இந்த பைரவ திருமேனிகள் செய்ய உதவலாம் இதன் மூலமாகவும் உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் இந்த பைரவர்கள் அருளால் உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறையினர்க்கும் இந்த பைரவர் இருக்கும் காலம் வரை புண்ணியம் கிடைக்கும்.

மேலும் இந்த பைரவர் திருமேனிகளுக்கு உதவி செய்வதன் மூலம் நமது குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனகளும் குடும்பஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு, கல்யாணம், குழந்தையின்மை, மாந்திரிக சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், கண்திருஷ்டியால்பாதிக்கபட்டவர்கள்.பூா்வ ஜென்ம கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிதூர்தோசம், பிதூர்சாபம்உள்ளவர்கள், காலசர்ப்ப தோசம்,நவக்கிரக தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற அனை‌த்து விதமான எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகும். நமக்கு தான் குறிப்பிட்ட வயதில் மரணம் உண்டு இந்த உற்சவ திருமேனிகள் 1000 வருடங்கள் கடந்தாலும் அப்படியே தான் இருக்கும் இந்த திருமேனிகளுக்கு உதவுவதன் மூலம் இந்த திருமேனிகள் இருக்கும் காலம் வரை நமக்கும் நமக்குப்பின் வரும் நம் சந்ததியினருக்கும் எந்த பாதிப்பும் வராமல் இந்த தெய்வத்தின் அருள் நம்மை பரிபூரணமாக காத்து நிற்க்கும் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும்.

நமது பீடத்திற்காக இப்பொழுது உன்மத்த மகா கால பைரவர்,& சொர்ண ஆகர்சன பைரவர் செய்ய முடிவு செய்து உன்மத்த மகா கால பைரவர் தனது திருமேனியில் 12ராசிகளைய் குறிக்கும் வகையில் 12 நாகங்களைய் ஆபரணமாகவும் திருவாட்சியில் ஒவ்வொரு பக்கமும் 9 கிரகங்களைய் தாங்கி நிற்பது போல 9 நாக சர்ப்ப அமைப்புகள் காலசர்ப்ப தோஷத்தில் ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்கள் இருப்பது போல் நமது பீட பைரவர் நாகங்களுக்கு மத்தியில் காலசர்ப்பதோஷ நிவாரணியாகவும் மேலும் குதிரை, நாய் வாகனத்துடனும் பித்ரு, சர்ப்ப தோஷத்துக்கு நிவாரணியாக அமைய உள்ளார். அனைத்து நட்சத்திர ராசியினரும் வழிபட்டு பயனடையும் வகையில் அமைய உள்ளது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் செல்வத்திற்க்கு அதிபதியாகவும் வாழ்வில் வெற்றிக்காக போராடி கொண்டிருப்பவர்கள் மேலும் தனது துறையில் 99/- விழுக்காடு வந்து தோல்வி அடைபவர்கள் இந்த பைரவரை சரணடைந்தால் வெற்றி பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அவரது திருவாட்சியில் அனைத்து தடைகளையும் எரிக்கும் விதமாக தீச் சூவாலய் அமைப்புடன் அமைய உள்ளது .இவரைய் சரணடைய எங்கும் எதிலும் வெற்றி தான்.

இந்த இரு பெரும் பைரவர் ஐம்பொன் சிலை செய்வதற்க்கு மோல்டிங்டைய் எல்லாம் ரெடியாகி விட்டது மெட்டல் வாங்க பணம் இல்லாத காரணத்தால் வேலைகள் தடைப்பட்டுள்ளது

இந்த அருமையான புண்ணிய காரியத்தில் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளை செய்து பைரவர் ஐம்பொன் சிலை செய்ய உதவுவதன் மூலம் நமக்கும் நமக்கு பின் வரும் தலைமுறையினருக்கும் புண்ணியத்தைய் சேர்த்து வாழ்வாங்கு வாழ செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி
ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

வாழ்க_வளமுடன்
ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ
ஓம்சிவசிவஓம்
திருச்சிற்றம்பலம்.

பைரவரை வணங்கினாலே எல்லாவித நன்மைகள் கிடைக்கும் என்றால் நமது பீடத்திற்காக இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கு ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்தி செய்கிறோம் அதற்க்கு உதவினால்
உங்க வாழ்க்கையில் சனிஸ்வர கிரகத்தினால் எந்த விதமான பாதிப்பும் எப்பொழுதும் வரவே வராது மேலும் உஙகள் வாழ்வில் உள்ள அனைத்துவிதமான தோஷங்கள், பாவங்கள் எல்லாம் நீங்கி சந்தோசமான இனிமையான வாழ்க்கை கிடைக்கும்.

பிறகென்ன… வெற்றி வெற்றி எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான்.