Category: News

நமது பீட சொர்ணாகர்ஷன பைரவருக்கு புரட்டாசி மாத பொர்ணமி பூஜை

By Biravar in News on September 24, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் 20.09.2021 திங்கட்கிழமை புரட்டாசி மாத பொர்ணமி பூஜை நமது பீட சொர்ணாகர்ஷன பைரவருக்கு அன்று மாலை 04.00 மணிக்கு மேல விஷேச அபிஷேகம், அலங்காரம், மற்றும் தீபாரதனையுடன் பொளர்ணமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது அந்த நிகழ்வுகளை கீழுள்ள லிங்க் மூலமாக கண்டு மகிழுங்கள்.

மேலும் நமது பீடத்தில் உள்ள கன்னிமூல கணபதிக்கு புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை 24.09.2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05:00 மணிக்கு மேல மிக சிறப்பாக நடைபெறும்.

மேலும் நமது பீடத்தில் உள்ள
அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு பரட்டாசி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை வருகின்ற 25.09.2021 சனிக்கிழமை பரணி&கார்த்திகை நட்சத்திரத்தில் அன்று காலை 10:00 மணிக்கு மேல பூஜை மிக சிறப்பாக நடைபெறும் மேலும் அன்று முருகனின் கார்த்திகை நட்சத்திரம் வருவதால் அன்று நமது பீட முருகனுக்கு புதிதாக ஒரு சேவற் கொடி வாங்கியுள்ளோம் அதை நமது பீட முருகனுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு விஷேச அபிஷேக அலங்காரத்துடன் இனிதாக பூஜைகள் நடைபெறும்.

மேலும் 29.09.2021 புதன்கிழமை திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய தேய்பிறை அஷ்டமியில் நமது பீட சொர்ணாகர்ஷன மகா கால பைரவருக்கு அன்று காலை 10:00 மணிக்கு மேல தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற உள்ளதால் இந்த பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற தங்களால் முடிந்தால் முடிந்த உதவியினை செய்யும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நமது பீடத்தின் மூன்றாம் ஆண்டு வருஷாபிசேகம் 01.11.2021 திங்கட்கிழமை ஐப்பசி மாத உத்திரம் நட்சத்திரத்தில் மிக சிறப்பாக நடைபெறும் அன்று நமது பீட சொர்ண பைரவி அம்பிகா சமேத சொர்ண ஆகர்சன பைரவருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும் இந்த இடைப்பட்ட கால கட்டத்திற்குள் சொர்ணாகர்ஷன பைரவர் ஐம்பொன் (விக்ரகம்) சிலையை செய்து கொண்டு வர வேண்டியது உள்ளதால் ஐம்பொன் சிலை செய்வதற்க்கு மாதிரி மெழுகு சிலை (மோல்டிங்டைய்) ரெடியாக உள்ளது மெட்டல் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் இந்த ஐம்பொன் சிலை வேலைகள் முடிய தாமதமாகிறது இதை படிக்கும் பைரவ அன்பர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து இந்த பைரவ ஐம்பொன் திருமேனி நமது பீடத்திற்க்கு வர உதவி குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டிக் கொள்கிறோம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீ காலபைரவர் வழிபாடு

By Biravar in News on July 17, 2021

அஷ்ட பைரவர் காயத்ரீ மந்திரங்கள்

       1 .ஶ்ரீ அஸிதாங்க பைரவர் காயத்ரீ
         (கல்வியில் மேன்மை பெற)

ஓம் ஞானதேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அஸிதாங்க பைரவ ப்ரசோதயாத்

   2. ஶ்ரீ ஶ்ரீ குரு பைரவர் காயத்ரீ
        (கடன் சுமை குறைய)

ஒம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ குரு பைரவ ப்ரசோதயாத்

    3. ஶ்ரீ சண்ட பைரவர் காயத்ரீ
         (  சத்ரு தொல்லை நீங்க)

ஓம் சர்வசத்ரு நாஸாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்

     4.ஶ்ரீ குரோதன பைரவர் காயத்ரீ
         (அகங்காரம் அகல,சனி பாதிப்பு         குறைய)

ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்

      5.ஶ்ரீ உன்மத்த பைரவர் காயத்ரீ
          (தீய குணங்கள் விலக)

ஓம் மஹாமந்த்ராய வித்மஹே
வாராஹி மனோகராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்

       6.ஶ்ரீ ஸம்ஹார பைரவர் காயத்ரீ
           (துஷ்டர்களை அழிக்க)

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்

       7.ஶ்ரீ பீஷண பைரவர் காயத்ரீ
               (பயம் நீங்க)

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ரஹாய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்

         8.ஶ்ரீ கபால பைரவர் காயத்ரீ
               (அறியமை நீங்க)

ஓம் காலதண்டாய வித்மஹே
வஜ்ரவீராய தீமஹி
தந்நோ கபாலபைரவ ப்ரசோதயாத்

         9.ஶ்ரீ யோக பைரவர் தியானம்

உஷ்ணீம் நீலோத்பல பத்ரபுஷ்பாம் த்வய தம்ஸ்ட்ரவக்ராம்
அசனீம்சஹீம் யோகானஸ்த்தாம்
கர்ணேன தாடங்க கரண்டமகுடாம் கரத்வயாம்

ஶ்ரீ வல்மீக பைரவம் வந்தே நமாமி
நவகிரகங்களால் ஏற்படும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.

ஸ்லோகம் :
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில் இந்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையை செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் இந்த கஷ்ட காலத்திலும் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து உன்மத்த மகா கால பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க நம் உன்மத்த மகா கால பைரவசுவாமி துணை நின்று திருவருள் புரிவார் !

நம் வாழ்வில் அனைத்துக்கும் ஆதியே வாராகி தான்..

சாக்த மார்க்கத்தில் இவள் போல ஒரு காருண்யமும் இல்லை .. பிரளயமும் இல்லை ..

நினைத்து பார்த்த மாத்திரத்தில் கண்முன்னே சட்டென்று காட்சி தருபவள் #அஸ்வாரூடா வாராகி.. இவளோ வெண்குதிரை மீது யௌவனவதியாக பேரழகுடன் காற்றாக பறப்பவள்… மும்மடிப்புடைய இடையுடன் சர்வ நவரத்தினங்கள் ஆபரணங்கள் தரித்து வரும் அநாதரட்சகி .. இவளை நள்ளிரவு ஆராதனை செய்யும் பக்தர்கள் காதில் பன்றி உருமலுடன் தான் நேரில் பிரத்யட்சமாக வந்திருப்பதை தெரிவிப்பாள் ..

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வாராஹி நவராத்திரி ஸ்பெஷல்

By Biravar in News on July 17, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில் இன்று
09 – 07 – 2021 வெள்ளிக்கிழமை அம்மாவாசை திதி திருவாதிரை நட்சத்திரத்தில் காப்பு கட்டுதல், தீர்த்தவாரி மற்றும் மாக்காப்பு அலங்காரத்துடன் இனிதே இன்றில் இருந்து அஷடா நவராத்திரி பூஜை தொடங்கி மிக சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீவாராஹி_அனுகிரஹாஷ்டகம்

ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நமஹ !

  1. மாதர் ஜகத்ரச்னநாடக சூத்ரதார சத்ரூபமா கலயிந்து பரமார்த்த தோயம்
    ஈஸோப்யமீஸ்வரபதம் ஸமுபைதி தாத்ருகோ-ன்ய ஸ்தவம் கிமிவ தாவகமாததாது

பொருள்: சிருஷ்டி நாடகத்தை நடத்தும் அந்த ஈஸ்வரன் கூட உன்னுடைய நிஜ ஸ்வரூபத்தை உணர முடியாத போது, வேறு எவரால் உன்னை வாழ்த்தி பாட இயலும் அம்மா!!

2.நாமாநி கிந்து கிருணதஸ்தவ லோகதுண்டே
நாடம்பரம் ஸ்ப்ருஸதி தண்டதரஸ்ய தண்ட:
யல்லேஸலம்பிதப வாம்பு நிதிர்யதோ யத்
த்வந்நாமஸம்ஸ்ருதிரியம் நநு ந: ஸ்துதிஸ்தே

பொருள்: ஓ வாராஹி தாயே! அகில உலகத்தையும் நினது திருமுகமாக உடையவளே! உன் திருநாமத்தை பக்தியுடன் துதிப்பவர் யம தண்டனையை அடைய மாட்டார்கள்.

நினது வைபவத்தின் ஒரு துளியை துதிப்பவரும் சம்சார கடலிலிருந்து விடுபடும் போது, நினது புகழை சதா பாடிக் கொண்டே இருக்கும் பக்தர்களின் சௌபாக்கியம் பற்றி மேலும் கூறத் தான் வேண்டுமோ!

  1. த்வச்சிந்த நாதரஸமுல்ல ஸதப்ரமேயா
    நந்தோதயாத் ஸமுதித ஸ்புடரோமஹர்ஷ
    மாதர்நமாமி ஸுதிநாநி ஸதேத்யமும் த்வா
    மப்யர்தயேர்தமிதி பூரயதாத்தயாலோ

பொருள்: ஓ வாராஹி தாயே! உன்னை ஆழ்ந்து தியானித்து எல்லையில்லா பேரின்பத்தை அடைந்திருக்கும் யான் உன்னை பலமுறை பணிந்து வணங்குகிறேன்.

என்றும் இப்படி நின்னை நினைந்து, வணங்கி புளகாங்கிதம் அடையும் பரம சௌபாக்கியத்தை என்றும் நல்கி அருள் புரிவாய் தாயே!

  1. இந்திரேந்து மௌலிவிதி கேஸவ மௌலிரத்ன
    ரோச்சிஸ்சயோஜ்வலித பதசரோஜ யுக்மே
    சேதோநதௌ மம சதா பிரதிபிம்பித த்வம்
    பூயா பவானி பவநாசினி விததாது ஸதாருஹாரே

பொருள்: ஓ வாராஹி தாயே! நினது திருவடி கமலங்களை வணங்கும் இந்திராதி தேவர்கள் மற்றும் பிரம்ம விஷ்ணு மஹேசர்களின் மகுடங்களில் பதிந்த ரத்னங்களின் ஒளியால் மிளிரும் கறுத்த காந்தி உடையவளே!

சகல துன்பங்களையும் போக்கும் உனது அருட்கடாக்ஷம் என்றும் எனது மனதில் நிறைந்திருக்க அருள்வாய் தாயே! பலமுறை நின் தாள் பணிகிறேன் அம்மா!

  1. லீலோத்ருத க்ஷிதி தலஸ்ய வராஹமூர்த்திர்
    வராஹமூர்த்திர் அகிலார்த்த கரி த்வமேவ
    பிராளேய சுகலோல்லஸிதாவதாம்ஸ
    த்வம் தேவி வாமதநுபாகஹரா ரஹஸ்ய

பொருள்: ஓ சகல கல்யாண குணங்களும் நிரம்பியவளே! கடலில் அமிழ்ந்த பூமியை விளையாட்டாக தூக்கிய வராஹ மூர்த்தியின் முகத்தை உடையவளே!

அழகிய பிறை சந்திரனை கொண்டு சிரசை அலங்கரித்தவளே! ஈசனின் இடபாகம் கொண்டவளே! வாராஹி தாயே போற்றி! போற்றி!

  1. த்வாமம்ப தப்த கநகோஜ்வல காந்திமந்த
    ஆர்யே சிந்தயந்தி யுவதி தநு மகாலாந்தம்
    சக்ராயுதம் திரிநயனாம்பர போத்ருவக்த்ராம்
    தேஷாம் பதாம்புஜயுகம் பிரணமந்தி தேவா

பொருள்: கழுத்து வரை தங்கம் போன்ற திருமேனியையும், வராஹ முகமும், மூன்று கண்களும் உடையவளே! சக்ராயுதத்தை கரத்தினில் ஏந்தியவளே! நின்னை வணங்குவோரின் திருவடியை தேவரும் வணங்குவர் தாயே!

7.த்வத்ஸேவன ஸ்கலித பாபசயஸ்ய மாதர்மோக்ஷோபி யத்ர ந ஸதாம் கணநாமுபைதி
தேவாஸுரரோரகந்ருபாலநயஸ்ய பாதபீட
கஸ்ய ஸ்ரிய ஸ கலு பஜநாதம் நே ததே

பொருள்: பக்தியுடன் நின் பாத சேவையில் ஈடுபட்டு வரும் சாதாரண மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைவது மட்டுமின்றி அவர் மன்னர், தேவர், அசுரர், நாகர் அனைவராலும் வணங்கப்படுவர். இவ்வுலகில் அவரால் அடைய முடியாதது என்று ஏதுமின்றி செய்வாய் தாயே! வாராஹி!

8.கிம் துஷ்கரம் த்வயி மனோவிஷயம் கதாம்
கிம் துர்லபம் த்வயி விதானு வர்ச்சிதாயாம்
கிம் துஷ்கரம் த்வயி ஸக்ருத் ஸ்ம்ருதி மாகதாயாம்
கிம் துர்ஜயம் த்வயி க்ருதஸ்துதிவாதபும்ஸாம்

பொருள்: உன்னை மனதில் நிறுத்தியோர்க்கு எதை தான் அடைய முடியாது?! உன்னை வழிபடுவோருக்கு எது தான் இல்லை?! உன்னை சிந்தையில் நிறுத்தியோர்க்கு எது தான் அப்பாற்பட்டது?! உன்னை வழிபடுவோருக்கு தோல்வி என்பது தான் ஏது?! தாயே வாராஹி!!

ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசை இன்றிலிருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

பைரவரை போற்றும் தேவாரம் பாடல்

By Biravar in News on June 20, 2021

தோஷம், பிரச்சனை, கடன் தொல்லை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பைவரருக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் அடையலாம்.

விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி

வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.

மேலும் அடுத்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நமது பீடத்திற்காக உன்மத்த மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பைரவருக்கும் ஐம்பொன் உற்சவ திருமேனிகள் செய்ய முடிவு செய்தோம் இது கொரோனா காலம் என்பதால் முடியவில்லை இப்பொழுது நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையைய் மட்டும்மாவது செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் இந்த கஷ்ட காலத்திலும் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து உன்மத்த மகா கால பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க நம் உன்மத்த மகா கால பைரவசுவாமி துணை நின்று திருவருள் புரிவார் !

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண விருந்து சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

சந்திரபகவானை இப்படி தரிசனம் செய்தால் வேண்டுதல் நிறைவேறும்.

By Biravar in News on June 12, 2021

12_06_21சனிகிழமைதவறவிடாதீர்கள்நாளைஇரவுசந்திர_பகவானை,
#இப்படிதரிசனம்செய்தால்வேண்டியவேண்டுதல்உடனேநிறைவேறும்.
🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜
பொதுவாகவே மூன்றாம் பிறை அன்று, சந்திர தரிசனம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும். குழப்பமான நிலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு கூட, சுலபமாக தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். இப்படி இருக்க 12-06-2021 இன்று இரவு 7.19 மணியிலிருந்து 8.12 மணிக்குள் சந்திர பகவானை தரிசனம் செய்தால் நம் மனதில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த தினத்தில் சந்திர பகவானை எப்படி முறையாக வழிபட வேண்டும் என்பதைப் பற்றியும், குறிப்பாக எந்த நட்சத்திரக்காரர்கள் இந்த தரிசனத்தை செய்தால் முக்தி பெறும் அளவிற்கு பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
🌜
இன்றைய தினம் உங்களால் முடிந்தால் கஷ்டப்படும் ஒருவருக்கு, தானம் செய்யலாம். இன்றைய தினத்தில் செய்யப்படும் தானமானது நூறு மடங்கு பலனைத்தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 7.19 மணியிலிருந்து 8.12 மணிக்குள் உங்கள் வீட்டு மொட்டை மாடிக்கோ அல்லது பால்கனிக்கோ அல்லது வீட்டு வாசலிலோ, எந்த இடத்தில் உங்களுக்கு சந்திரதரிசனம் கிடைக்குமோ அந்த இடத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
🌜
வெறும் கையோடு சந்திர பகவானை தரிசனம் செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பச்சரிசியை சிறிதளவு எடுத்துக்கொண்டு, ஒரு தாம்பாளத் தட்டில் அந்த பச்சரிசியை பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து, உங்களது இரண்டு கைகளையும் ஏந்தி, அதாவது இரண்டு கைகளையும் சாமி கும்பிடுவது போல மூடிக் கொள்ளக்கூடாது.
🌜
உங்களது கை இரண்டையும் விரித்து அந்த இறைவனிடம் வேண்டுதல் வைக்க வேண்டும். அதாவது யாசகம் கேட்பது போல் சந்திர பகவானிடம், இன்று நீங்கள் உங்களது வேண்டுதலை வைத்தால், அதற்கான பலனை கூடிய விரைவில் பெற்றுவிடலாம். நல்ல மனதோடு, நீங்கள் வைக்கும் எந்த ஒரு நல்ல வேண்டுதலாக இருந்தாலும், அது படிப்படியாக வெற்றியை நோக்கி செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
🌜
குறிப்பாக ரோகிணி, அஸ்தம் திருவோணம் இந்த மூன்று நட்சத்திரகாரர்கள் தொடர்ந்து ஆயிரம் முறை சந்திர பகவானை, மூன்றாம் பிறை அன்று தரிசனம் செய்து வைத்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் முக்தி கிடைத்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் இந்த சந்திர பகவானை நீங்கள் தரிசனம் செய்துவிட்டால் போதும். அந்த ஆயிரம் முறை தரிசனம் செய்த பலனை பெற்றுவிடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அனைவரும் இந்த சந்திர தரிசனத்தை தவறவிடாமல், வழிபாடு செய்து பலன் பெற வேண்டும்.

மைத்ர முகூர்த்த நேரத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுங்க மள மள வென கடன் பிரச்சினை தீரும்

மைத்ர முகூர்த்தம் ஒரு தமிழ் மாதத்தில் அதிக பட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்ச மாக இரண்டு மணி நேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

கடன் அடைக்கும் காலம்

செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் ஆகும். இதே போல செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தமாகின்றது. வரும் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை அனுஷ நட்சத்திரம் இணைந்து விருச்சிக லக்கினம் வரும் நேரம் கடன் அடைக்க ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமை மாலை 03:52 மணி முதல் 05:58 வரை கடன் அடைக்கலாம்.
நீங்கள் பெருந்தொகையாகத் தரவேண்டிய கடன் தொகையில், கொஞ்சமேனும் குறிப்பிட்ட இந்த நாளில், இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பிக் கொடுங்கள். எவ்வளவு பெரும் தொகை யானாலும், சிறுக சிறுக அடைபட்டுவிடும் என்பது உறுதி.

ஆனி மாதத்தில் ஜூன் 22 தவிர 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:01 மணி முதல் 02:28 வரை கடன் அடைக்கலாம்.
அதே போல ஆடி மாதத்தில் 20.07.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 01:05 மணி முதல் மாலை 04:11 வரை கடன் அடைக்கலாம். 30.07.2021 வெள்ளிக்கிழமை இரவு 10:50 மணி முதல் இரவு 01:00 வரையிலும் கடன் அடைக்க நல்ல நாள்.

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் சோடசக்கலையை பின்பற்றுங்கள்…!

By Biravar in News on June 10, 2021

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் சோடசக்கலையை பின்பற்றுங்கள்…!!!

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும்கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள்சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது,வீட்டில் நறுமணம் எப்போதும்கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது.

அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.

திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!

இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.

தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம்.இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.

அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்.

திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச்சொல்வார்கள். இந்த 16 வது கலையை சித்தர்களும், முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கிவே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும்( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி,ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை,காண்டாமிருகம், நாய்,குதிரை,கழுதை,
கோவேறுக்கழுதை,எறும்பு, சுறாமீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.

அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அதுகிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது. ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.

இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது.திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறுகாலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .

நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.

வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.

அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம்,பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றிஎதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும். தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

இந்த தகவலைய் உலகுக்கு அறிவித்தது என் ஆன்மீக குருநாதர் திரு #ஸ்ரீம்மிஸ்டிக்செல்வம் ஐயா அவர்களே …

இம்மாத அமாவாசை சோடசக்கலை நேரம் 10/06/2021=வியாழக்கிழமை
மாலை 3:51pm முதல் 05:50pm வரை. .

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வைகாசி மாத அஷ்டமி சதாசிவாஷ்டமி

By Biravar in News on June 3, 2021

☘☘☘☘☘☘☘☘

பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.

பைரவருக்குண்டான பொது காயத்ரி

சுவாநத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத்

பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

☘️
புதன்கிழமை அன்று ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.
☘️

புதன்கிழமை மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரகாரர்கள் இந்த கிழமையில் பைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். புதன் கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

சொர்ண பைரவ மந்திர ரகசியம்!

சொர்ண பைரவரின் மந்திரம் ஒன்றினை பகிர்ந்து கொள்கிறேன். இந்த மந்திரம் அகத்தியரால் தனது “அகத்தியர் பரிபாஷை” என்னும் நூலில் அருளப் பட்டிருக்கிறது. தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முயற்சியில் சுணங்கியிருப்போருக்கும் இந்த மந்திரம் உதவுமென்கிறார் அகத்தியர்.

இந்த மந்திரத்தின் மகிமையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

தான்பார்க்குந் தொழிற்கெல்லாம் வயிரவனும்வேணும்
தன்மையுடன் தொட்டதெல்லாம் பலிக்கும்பாரே
மான்பார்த்த சிவகிருபை யிருந்துதானால்
மக்களே செய்தொழிலும் பங்கமாமோ
கோன்பார்த்தக் குருமுடிக்க அருகில்நின்று
குணங்குறிகள் தவறாமல் மனதிற்றோணி
வான்பார்த்த கருவெல்லாம் வெளியதாக
மக்களே தோணுமடா மகிழ்ந்துபாரே.

செய்யும் தொழில்கள் எல்லாவற்றிற்கும் சொர்ணபைரவர் அருள் வேண்டுமாமாம். அப்படி அவர் மந்திரம் சித்தித்தால் தொட்டதெல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர். மேலும் சிவபெருமானின் கருணை இருந்தால் செய்யும் தொழிலில் பங்கமே வராது என்கிறார். அதற்கு வைரவர் துணை என்றென்றும் வேண்டும். செய்தொழிலில் குணம் குறைகள் மனதில் தோன்றி தவறுகள் நேராது காக்க இந்த மந்திரம் உதவுமென்கிறார். அத்துடன் எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தோன்றும் மகிழ்ந்து பார் என்றும் சொல்கிறார்.

இத்தனை சிறப்பு வாய்ந்த மந்திரம் என்ன?.அதை எப்படி பயன் படுத்துவது என்பதை பின்வருமாறு அருளுகிறார்.

பண்ணப்பா சொர்ணவயி ரவன்றன் பூசை
பாங்கான மந்திரத்தைச் சொல்லக் கேளு
எண்ணப்பா ஓங்கென்றும் ஸ்ரீங்கென்றுந்தான்
என்முன்னே சொர்ணரூபா வாவாவென்றும்
கண்ணப்பா நானெடுத்த கருவெல்லாந்தான்
கைவசமாய்ச் செய்துவைக்க வாவாவென்று
சண்ணப்பா நூற்றெட்டு உருவேயானால்
தன்வசமாய் போகுமடா தான்பார்ப்பீரே.

“ஓங் ஸ்ரீங் என் முன்னே சொர்ணரூபா வாவா. நான் எடுத்த கருவெல்லாம் கைவசமாய் செய்து வைக்க வாவா” என்பதுதான் சொர்ண பையிரவரின் மந்திரம். இதனை நூற்றி எட்டு உரு செபித்தால் மந்திரம் சித்தியாகுமாம் என்கிறார்.

மேலும் இந்த மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
அல்லதா லின்னூலே சொல்லும்பாரே.

சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்… குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து சொல்லும் என்றும் சொல்கிறார்.

எனவே, எல்லாம் வல்ல குருநாதரை மனதில் தியானித்து மிகவும் எளிதான இந்த மந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் பெற குருவருள் துணை நிற்கட்டும்.

மேலு‌ம் நமது தூத்துக்குடி மாநகரம் விஸ்வபுரம் முதல் தெருவில் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பெரும் பைரவர்கள் அரசாட்சி செய்கிறார்கள் இந்த இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கும் புதிதாக ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்திகள் செய்ய வேண்டி உள்ளது
அதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்து இந்த பைரவ திருமேனிகள் செய்ய உதவலாம் இதன் மூலமாகவும் உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் இந்த பைரவர்கள் அருளால் உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறையினர்க்கும் இந்த பைரவர் இருக்கும் காலம் வரை புண்ணியம் கிடைக்கும்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

ஸ்ரீம் அன்னை ஆதி பராசக்தி சொர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

By Aathi Biravar in News on May 8, 2021

இந்த பீட திருப்பணி வேலைகள் 2015 ம் வருடம் கடைசகயில் தொடங்கி 2018 ம் வருடம் நவம்பர் மாதம் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது கிட்ட தட்ட 3 ஆண்டுகள் மிகுந்த சிரமப்பட்டு தான் முடித்தோம். நமது பீட ஆதிபராசக்தி, வாராஹி அம்மன் மற்றும் சொர்ண ஆகர்ஷண பைரவர், மகா கால பைரவர் படம் மற்றும் கும்பாபிஷேக, வருஷாபிஷேக அழைப்பிதழ்கள் கீழேயுள்ளது.

மேலும் நமது பீடத்தில் கன்னிமூலகணபதி, லெட்சுமி கணபதி என்று இரு கணபதியும் பழனி தண்டாயுதபாணியாக முருகனும், மகா மேருவுடன் அன்னை ஆதிபராசக்தியும், சொர்ண பைரவி அம்பாள் சமேதராக சொர்ண ஆகர்சன பைரவரும், காளி அம்சமாக பத்திரகாளி அம்மனும், குதிரை மேல் அமர்ந்த கோலத்தில் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனும், சபரிமலை சாஸ்தாவாக ஐய்யப்பனும், கால சக்கரத்துடன் மகா கால பைரவர் தனது நாய் வாகனத்துடன் உலகில் வேறெங்கும் கான முடியாத பைரவராக இங்கு அரசாட்சி செய்கின்றார், மேலு‌ம் நாக அம்சமாக ராகு, கேது சிலைகளும் இங்குள்ளது.

மேலும் நமது பீடத்தில் அமைய பெற்ற ஒவ்வொரு தெய்வ திருமேனிக்கும் மாதத்தில் ஒரு நாள் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டுமென தீர்மானித்து கன்னிமூலகணபதிக்கு சங்கடஹர சதர்த்தியும், லெட்சுமி கணபதிக்கு சுக்ல பட்ச சதுர்த்தியும், முருகனுக்கு விசாக நட்சத்திரமும், அன்னை ஆதிபராசக்திக்கு பொளர்ணமி பூஜை, தமிழ் மாத பிறப்பு, தமிழ் மாத கடைசி வெள்ளியும், வாராஹி அம்மனுக்கு வளர்பிறை, மற்றும் தேய்பிறை என்று இரு பஞ்சமி திதிகளும், சொர்ணாகர்ஷன பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி திதியும் மகா கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகளும் நடைபெற்று வருகின்றது.

மேலும் இங்குள்ள பத்திரகாளியம்மன் மற்றும் ஐயப்பனுக்கும் பொருளாதார சூழலுக்கேற்ப ஏதாவது செய்து கொண்டு இருக்கிறாம் இது வரையிலும் எந்த பூஜைக்கும் கட்டளைதாரர்கள் கிடையாது நமது பீடத்திற்கு வரும் பக்தர்களுக்காக தினமும் ஏதாவது ஒரு பிரசாதம் வழங்கி கொண்டு இருக்கிறாம்.

சென்ற வருட கொரனாவில் இருந்து சுக்ல பட்ச சதுர்த்தி, சுக்ல பட்ச அஷ்டமி, முருகனுக்குறிய விசாக நட்சத்திர பூஜைகள் எதுவும் நடத்த முடியவில்லை இதி்ல் என் உடல்நிலை வேர கொஞ்சம் சரி இல்லாத காரணத்தால் என்னால ஏதும் செய்ய முடியவில்லை.


மேலம் நமது பீடத்தில் பெரிய நிகழ்வாக சித்திரா பொளர்ணமி இந்த நாளில் அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்.

வைகாசி விசாகம் முருகனுக்குறிய விஷேச பிறந்த நாள் நட்சத்திரம் அன்றைய தினம் முருகனுக்கு விஷேச அபிஷேக அலங்கார என்று முருகனுக்கு சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.

ஆனி மாத அம்மாவாசையில் இருந்து 10 நாள் வாராஹி அம்மனுக்கு அஷடா நவராத்திரி விழா மிக சிறந்த முறையில் தினமும் யாக பூஜையுடன் நடைபெரும் இந்த பூஜையின் சிகர நிகழ்வாக 10ம் நாள் வாராஹி அம்மன் திருக்கல்யாணமும் அதோடு கல்யாண விருந்து சாப்பாட்டுடன் நிறைவு பெரும்.

ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று மூன்று அம்பாளுக்கம் ஆதிபராசக்தி, பத்திரகாளி, வாராஹி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று இரவு அன்னதானத்துடன் மினி கொடை மாதிரி நடைபெறும். ஆடி மாத வரும் ஒவ்வொரு செவ்வாயும், வெள்ளியும் அம்பாளுக்கு கூழ் அல்லது கஞ்சி காய்ச்சி பூஜைகள் நடைபெறும்.

ஆவணி மாதம் இரண்டு விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி பூஜை மிக சிறப்பாக நடைபெறும்.

புரட்டாசி மாதம் ஆதிபராசக்திக்கு 10 நாள் நவராத்திரி பூஜைகள் தினம் ஒரு அலங்காரத்துடன் மிக சிறப்பாக நடைபெறும்.

ஐப்பசி மாதம் நமது பீட வருஷாபிஷேகம் மிக சிறந்த முறையில் விஷேச ஹோமம், அபிஷேகம், அலங்காரம், பால்குடம் மூன்று வேலை அன்னதானத்துடன் மிக சிறப்பாக நடைபெறும்.


கார்திகை மாதம் பொளர்ணமி அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்காரம் முடித்து சொக்க பானை ஏற்றும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெறும். இந்த மாதம் பைரவர் பிறந்த அஷ்டமி வவருவதால இரு பைரவருக்கும் விஷேச ஹோமம்,அபிஷேக ,அலங்காரத்துடன் அன்ன படையலுடன் அன்னதானமும் நடைபெறும் .


மார்கழி மாதம் தினமும் அதி காலை 03 : 00 மணிக்கு கோயில் நடை திறந்து பிரம்ம முகூர்த்தத்தில் தினமும் இரண்டு பிரசாதங்கள் போட்டு மார்கழி மாதம் முழுக்க சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.

தை மாதம் பிறப்பு பொங்கல் வைக்கும் வைபவம் மற்றும் மதியம் அன்ன படைப்பு மிக சிறப்பாக நடைபெறும். மேலும் தை மாத எல்லா வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்.

மாசி மாதம் வரும் சிவராத்திரி 4 கால பூஜையும், மாசி மகம் அன்றும் அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்.

பங்குனி மாத வருகின்ற உத்திர நட்சத்திரத்தில் ஐயப்பனுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்

இதெல்லாம் வருடம் ஒரு முறை நடக்கும் பூஜைகள் இந்த நாள்ல மாத பூஜைகள் பஞ்சமி, சதுர்த்தி, அஷ்டமி பூஜைகள் வந்தாலும் அதுவும்கூட தனியாக நடைபெறும்.
இதில் எந்த விதமான பூஜைக்கும் கட்டளைதாரர்கள் கிடையாது கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அறக்கட்டளை ஆரம்பித்தால் உதவிகள் கிடைக்கும் என்றார்கள் 2019ம் வருடம் 7வது மாதம் ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வாராஹி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையும் தொடங்கி நடத்தி வருகின்றோம் இது வரையிலும் எந்த உதவியும் வரவேயில்லை.

மேலும் நமது பீடத்திற்காக ஆதிபராக்தி அம்மன் மகா மேருவுடன், அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன், சொர்ணாகர்ஷன பைரவர், மகா கால பைரவர் ஆகிய திருமேனிகளுக்கு ஐம்பொன் உற்சவர் சிலை செய்ய தீர்மானித்தோம் இதில் முதலில் மஹா வாராஹி அம்மன் உற்சவர் ஐம்பொன் சிலை செய்ய ஆகும் பணம் அனைத்தும் தான் ஒருவர் மட்டுமே மொத்தமாக தருகிறேன் என்று கோயமுத்தூரில் உள்ள அன்பு பக்தைய் வெண்ணிலா நாகராஜன் ஏற்றுக் கொண்டார் . அந்த வாராஹி அம்மனை பிராண பிரதிஷ்ட செய்யலாம் என முடிவெடுக்கும் போது வாராஹி அம்மன் தனது ஜோடி உன்மத்த பைரவருடன் தான் அமர்வேன் என கூறினால் இதற்காக இப்பொழுது உன்மத்த மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என இரு உற்சவ ஐம்பொன் சிலைகள் செய்வதற்காக முதல்ல மெழுகு உருவ மாதிரி சிலை செய்து ரெடியாக உள்ளது மெட்டல் வாங்கினால் உடனடியாக உருக்கி ஊற்றி ஐம்பொன் சிலை ரெடி ஆனால் கையில் பணம் இல்லை பக்தர்கள் உதவினால் உடனடியாக இரு பைரவர்களும் ரெடியாகி விடுவார்கள் எனது முகநூலில் 5000 நண்பர்களும் மேலும் வெய்டிங் லிஸ்ட்ல 1000 நபரும் இருக்கின்றனர் ஆளுக்கு Rs.100 கொடுத்தாலும் இதற்க்குள் வேலைய முடித்து பைரவர் சிலையை கொண்டு வந்திருக்கலாம்.
நண்பர்களே தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து பைரவர் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் நமது பீடத்திற்காக தாயாராகி கொண்டிருக்கும் இரு பைரவர்களின் மெழுகு மாதிரி டைமேக்கிங் சிலை படம் கீழே உங்க பார்வைக்காக கொடுக்கிறேன்.

SrimMahesh Samyji #0m_siva_siva_om

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி விசாக பூஜை 25.05.2021 செவ்வாய் கிழமையன்று காலை 11:00 மணிக்கு மேல் மிக சிறப்பாக நடைபெற்றது.

நமது பீடத்தில் முருகனுக்கு பிறந்த நாளான இன்று 25.05.2021 செவ்வாய்கிழமை வைகாசி விசாக நட்சத்திர பூஜை பக்தர்களின் ஒத்துழைப்போடு மிக சிறப்பாக நடைபெற்றது.

அந்த பூஜையில் நடைபெற்ற நமது பீட முருகன் பழநி தண்டாயுதபாணியின் அபிஷேகம், அலங்காரம், மற்றும் விசேஷ அன்னப் படைப்பு பூஜைகள் உங்களுக்காக

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

பொளர்ணமி பூஜை

தல வரலாறு

By Biravar in News on May 8, 2021

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி பெருநகரம் விஸ்வபுரம் ஸ்ரீம்.மகேஷ் சுவாமிஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம் என்பது அங்கு அமர்ந்து அருளாட்சி செய்யும் ஆதிபராசக்தி அம்மன் மகேஷ் சுவாமிஜீ கனவில் அடிக்கடி வந்து எனக்கு உன் சொந்த வீடானது நான் முதன்முதலில் குடியிருந்த இடம் அங்கு என்கொரு அலயம் வேண்டும்மென்று அடிக்கடி என்னை தூங்க விடாத அளவில் கேட்டுக் கொண்டே இருந்தால் நான் வீட்டில் சொன்னேன் யாருமே அதற்க்கு ஒத்துழைக்கவில்லை அந்த வீடு 2010ல் தான் எல்லாம் தரைமட்டமாக இடித்து புதிதாக வாடகைக்கு விடும் படி வடிவமைத்து கட்டப்பட்டது அந்த வீட்டிலிருந்து மாதம் Rs.24000/- இருபத்திநான்காயிரம் ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்தது அந்த இடத்துல தான் இந்த அம்மா ஆலயம் கேட்க்க எனக்கு என்ன செய்ய என்று குழம்பிய நின்றேன் பிறகு கல்யாணம்மாகி பல வருடங்களாக குழந்தை இல்லாத நபருக்காக குழந்தை கொடு நான் சொந்தமாகவே உனக்கு ஆலயம் கட்டுகிறன் என்றேன் நீ வேலைக்கு இந்த நாளில் நாள் செய் நான் குழந்தை தருகிறேன் என்றால் நானும் ஒவ்வொரு கொத்தனாரா கூப்பிட்டுக் கேட்டேன் ஒவ்வொருத்தரும் வெவ்வேரு ஐடியா சொன்னார்கள் அனால் கையில் ஒன்றும் இல்லை இங்கு ஒரு பிள்ளையார் ஆதிபராக்தி சொர்ண ஆகர்சன பைரவர் வைப்பது என தீர்மானித்தோம் கட்டிட வேலைக்காக மட்டும் கடைசியாக ஒருவர் 3லட்சம் கொடுங்க நான் செய்கிறேன் என வந்து பேசி 5000/- அட்வான்ஸ் வாங்கி சென்றார் ஆனால் அவரால் வரவே முடியவில்லை பிறகு இன்னொரு கோயிலில் ஒரே பிரச்சனை என வந்தார்கள் அங்கே அந்த முத்தாரம்மன் கோயில் பிரச்சினையைய் சரி செய்தேன் அந்த கோயில் நிர்வாகி நான் வந்து வேலை செய்கிறேன் என வந்து வேலைய தொடங்கினார் வேலைகள் நான் அங்கே இருந்தால் தான் நடக்கும் எக்கச்சக்க பிரச்சினை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சாமியும் காளி முருகர் என எனக்கும் இங்கே இடம் வேண்டும் என்றனர் சரி என்று மைலாடியில் விநாயகர் லெட்சுமிகணபதியாகவும் முருகர் தண்டாயுதபாணியாவும் காட்சி அளித்தார்கள் அதேமாதிரியும் ஆதிபராசக்தி, மகாமேரு சொர்ண ஆகர்சன பைரவர் ஆகிய சிலைகள் ஆடர் கொடுத்து செய்ய சொல்லி அங்கே அந்த வேலையும் நிறைவுற்றது ஆனால் கட்டிட வேலை மட்டும் முடிந்தபாடில்லை 3லட்சத்துக்கு தொடங்கிய வேலை 12லட்சமாகியும் முடியவில்லை இதற்க்காக யாரிடமும் யாசிக்கவில்லை கடன் பட்டும் வேலைகள் முடியவில்லை பிற்கு தான் ஒரு 5000 நோட்டிஸ் அடித்தோம் அதுவும் எந்த உபகாரமும் இல்லை.

அதன் பிறகு கொஞ்ச நாள் வேலை ஏதும் செய்யவில்லை கையிலும் ஒன்றும் இல்லை இந்த கால கட்டத்தில் மைலாடியில் செய்த முருகன் சிலை உடைந்து விட்டது பிறகு முருகன் சிலை செய்ய வேண்டுமென செங்கோட்டையில் ஆர்டர் கொடுத்தேன் அங்கு அவங்க வேலை மிக சிறப்பாக இருக்க கஜலட்சுமி 2 கன்னி மூலையில் விநாயகர் வருவேன் என்றார் கன்னி விநாயகர் ஒன்றும் செய்தோம் இத்துடன் முடித்து கும்பாபிஷேகம் போய் விடலாம் என இருந்தோம் கையில பணம் ஒன்றும் இல்லாமல் வேலை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்க்குள் நம் தாய் வாராஹி குதிரை மேல் காட்சி கொடுத்து இந்த கோலத்தில் நானும் இங்கே அஷ்வாரூட மகா வாராஹியாக இங்கே அமர வேண்டும் என கட்டளையிட்டால் நான் அம்மா தாயே உன்னை வைத்து என்னால் பராமரிக்க முடியாது என்று நான் அமைதியாக இருக்க சினைபன்றி வடிவில் கோயிலுக்குள் வந்து படுத்து கொண்டு குட்டிய போட்டு அந்த இடத்துல இருந்து பன்றியைய் விரட்டியடிக்க படாத பாடு பட்டேம் அதன் பிறகு தான் நான் வாராஹி அம்மனைய் ஆலயத்தில் வைக்க சம்மதித்தேன்.
ஆதாடு என் அப்பன் மகா கால பைரவர் காலசக்கரத்துடன் வாகனத்தோடு காட்சி கொடுத்தார் அத்துடன் சபரிமலை சாஸ்தா ஐயப்பனும் நானும் இந்த இடத்தில் அமர்வேன் என்றும் கேட்டதற்காக செங்கோட்டை ஸ்தபதியிடம் நான் கண்ட காட்சியைய் சொல்லி அதே போல அவர் மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வாராஹி சபரிமலை சாஸ்தா ஐயப்பன் ஆகிய சுவாமி சிலைகளைய் செய்து கொடுத்தார் அட்வான்ஸ் கொடுக்காமலே வேலைய் செய்தார் வேலை முடித்த பிறகு தான் பணம் கொடுத்து சிலைகளைய் எடுத்து வந்தேன் ஒரு மாதிரியா வேலை எல்லாம் முடித்து கும்பாபிஷேக நாள் குறித்து பத்திரிக்கை எல்லாம் அடித்து கும்பாபிஷேகத்திற்க்கு தான் என் முகநூல் அன்பர்கள் உதவிகள் கொஞ்சம் கிடைத்தது மொத்தத்தில் அந்த கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்குள் கிட்டத்தட்ட 22 லட்ச ரூபாய் கடனாகித்தான் இந்த ஆலய வேலைகளைய் பூர்த்தி செய்தேன்.

பைரவர்பற்றிய அபூர்வதகவல்கள் மற்றும் பைரவமுகூர்த்தம்

By Biravar in News on April 28, 2021

24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது.

சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும்.

அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணப்படும் இந்த அற்புத அமிர்த நேரத்தை முதன்முதலாக உலகிற்கு வழங்கியவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்த நற்காரியத்திற்கும் முகூர்த்தம் லக்ன நேரம் குறித்துதான் காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், போதிய ஜோதிட ஞானம் இல்லாதோரும் சூழ்நிலை காரணங்களால் இத்தகைய முகூர்த்த லக்னங்களில் நற்காரியங்களை நிகழ்த்த இயலாதபோது மேற்கூறிய முகூர்த்தங்கள் நற்காரிய சித்தி அளிக்கவல்லதாய் அமைகின்றன. சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை உடையதே அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும்.

இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு. அவ்வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு ஒரளவு பரிகாரமாக அமைகின்றன. சித்தர்கள் அருளிய பைரவ முகூர்த்த நேரத்தைக் குறிப்பதே பைரவ மூர்த்திகளின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாய்களின் வால் பகுதியாகும். எந்த அளவிற்கு பைரவ மூர்த்திகளின் வாகனங்களின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பைரவ முகூர்த்தத்தைப் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து உணர்ந்து அதை நற்காரிய சித்திக்குப் பயன்படுத்த முடியும் என்பது சித்தர்களின் அறிவுரை,பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் விரவி உள்ளது? பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில் நான்கு கால்களில் திரமாக நின்ற தர்ம தேவதை தற்போதைய கலியுகத்தில் ஒரே ஒரு காலில் மட்டும்தான் நிற்கின்றது. எனவேதான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தகாத நிகழ்ச்சிகளையே நாம் சந்திக்கிறோம்.இத்தகைய தகாத நிகழ்ச்சிகள் நம்மைத் தாக்காது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தர்ம தேவதையின் ஆசீர்வாத சக்திகளை நாம் பெற்றாக வேண்டும். கலியுகத்தில் பூமியில் நிலை கொண்டிருக்கும் தர்ம தேவதையின் நாலாவது கால்தான் பைரவ வாகனத்தின் வால் பகுதியாகும். நாம் பைரவ வாகனத்தின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகள் இயற்றும் அளவிற்கு நாம் தர்ம தேவதையின் அனுகிரக சக்திகளைப் பெற்றவர்கள் ஆகிறோம்.பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.

உதாரணமாக,பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை இந்த பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள், பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள், அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள் இவற்றை இத்தகைய பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.

கணவன் மனைவி இவர்களுக்கு இடையே உள்ள தாம்பத்திய உறவிற்கு இரவு நேரமே ஏற்றது. பகல் நேர புணர்ச்சி நரம்புக் கோளாறுகளையும் சந்ததிகளின் அவயவ குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்,அதே போல பகலில் தூங்குவதும் உட்கார்ந்த, நின்ற நிலையில் தூங்குவதும் உடல் நலத்திற்கு உகந்ததன்று. இரவு நேர எண்ணெய்க் குளியலும் ஆரோக்கியத்தை அளிக்காது.இரவு நேரப் பயணங்களும், இரவில் நெடு நேரம் கண் விழித்லும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.இது போன்ற பகலிரவு கர்ம மாறுபாடுகளில் ஏற்படும் தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதே தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் வழிபாடாகும்.

பைரவ வாகன மூர்த்திகளின் வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும். இத்தகைய வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு, பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார்.
நீதிபதிகள், ஆட்சியாளர்கள், மந்திரிகள் திடீரென்று பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை இழந்து வாடும்போது அவர்களை இதுவரை அண்டியிருந்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மறைந்து விடுவார்கள். இது அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகும். ஆனால், இத்தகைய துன்பங்களால் பாதிக்கப்படும்போதுதான் அதன் உண்மை வேதனை புரிய வரும். இத்தகைய எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக் கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லதே தர்மக் கொடி பைரவ மூர்த்தியின் வழிபாடாகும்.

பைரவ மூர்த்திகளின் வாகனங்கள் வலது புறம் நோக்கியும் இடது புறம் நோக்கியும் பார்த்தவாறு அமைவதுண்டு. பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.எண்ணிக்கை குறைவு, அடர்த்திக் குறைவு போன்ற விந்துக் குற்றங்களால் அவதியுற்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக் கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் இறைப் பிரசாதமாக கிட்ட வாய்ப்புண்டு.

இரத்தச் சோகை, கர்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக் கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார்.

வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.

இது சிறு குறிப்பு மட்டுமே.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

மேலு‌ம் நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பெரும் பைரவர்கள் அரசாட்சி செய்கிறார்கள் இந்த இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கும் புதிதாக ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்திகள் செய்ய வேண்டி உள்ளது
அதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்து இந்த பைரவ திருமேனிகள் செய்ய உதவலாம் இதன் மூலமாகவும் உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் இந்த பைரவர்கள் அருளால் உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறையினர்க்கும் இந்த பைரவர் இருக்கும் காலம் வரை புண்ணியம் கிடைக்கும்.

மேலும் இந்த பைரவர் திருமேனிகளுக்கு உதவி செய்வதன் மூலம் நமது குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனகளும் குடும்பஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு, கல்யாணம், குழந்தையின்மை, மாந்திரிக சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், கண்திருஷ்டியால்பாதிக்கபட்டவர்கள்.பூா்வ ஜென்ம கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிதூர்தோசம், பிதூர்சாபம்உள்ளவர்கள், காலசர்ப்ப தோசம்,நவக்கிரக தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற அனை‌த்து விதமான எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகும். நமக்கு தான் குறிப்பிட்ட வயதில் மரணம் உண்டு இந்த உற்சவ திருமேனிகள் 1000 வருடங்கள் கடந்தாலும் அப்படியே தான் இருக்கும் இந்த திருமேனிகளுக்கு உதவுவதன் மூலம் இந்த திருமேனிகள் இருக்கும் காலம் வரை நமக்கும் நமக்குப்பின் வரும் நம் சந்ததியினருக்கும் எந்த பாதிப்பும் வராமல் இந்த தெய்வத்தின் அருள் நம்மை பரிபூரணமாக காத்து நிற்க்கும் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும்.

நமது பீடத்திற்காக இப்பொழுது உன்மத்த மகா கால பைரவர்,& சொர்ண ஆகர்சன பைரவர் செய்ய முடிவு செய்து உன்மத்த மகா கால பைரவர் தனது திருமேனியில் 12ராசிகளைய் குறிக்கும் வகையில் 12 நாகங்களைய் ஆபரணமாகவும் திருவாட்சியில் ஒவ்வொரு பக்கமும் 9 கிரகங்களைய் தாங்கி நிற்பது போல 9 நாக சர்ப்ப அமைப்புகள் காலசர்ப்ப தோஷத்தில் ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்கள் இருப்பது போல் நமது பீட பைரவர் நாகங்களுக்கு மத்தியில் காலசர்ப்பதோஷ நிவாரணியாகவும் மேலும் குதிரை, நாய் வாகனத்துடனும் பித்ரு, சர்ப்ப தோஷத்துக்கு நிவாரணியாக அமைய உள்ளார். அனைத்து நட்சத்திர ராசியினரும் வழிபட்டு பயனடையும் வகையில் அமைய உள்ளது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் செல்வத்திற்க்கு அதிபதியாகவும் வாழ்வில் வெற்றிக்காக போராடி கொண்டிருப்பவர்கள் மேலும் தனது துறையில் 99/- விழுக்காடு வந்து தோல்வி அடைபவர்கள் இந்த பைரவரை சரணடைந்தால் வெற்றி பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அவரது திருவாட்சியில் அனைத்து தடைகளையும் எரிக்கும் விதமாக தீச் சூவாலய் அமைப்புடன் அமைய உள்ளது .இவரைய் சரணடைய எங்கும் எதிலும் வெற்றி தான்.

இந்த இரு பெரும் பைரவர் ஐம்பொன் சிலை செய்வதற்க்கு மோல்டிங்டைய் எல்லாம் ரெடியாகி விட்டது மெட்டல் வாங்க பணம் இல்லாத காரணத்தால் வேலைகள் தடைப்பட்டுள்ளது

இந்த அருமையான புண்ணிய காரியத்தில் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளை செய்து பைரவர் ஐம்பொன் சிலை செய்ய உதவுவதன் மூலம் நமக்கும் நமக்கு பின் வரும் தலைமுறையினருக்கும் புண்ணியத்தைய் சேர்த்து வாழ்வாங்கு வாழ செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி
ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

வாழ்க_வளமுடன்
ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ
ஓம்சிவசிவஓம்
திருச்சிற்றம்பலம்.

பைரவரை வணங்கினாலே எல்லாவித நன்மைகள் கிடைக்கும் என்றால் நமது பீடத்திற்காக இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கு ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்தி செய்கிறோம் அதற்க்கு உதவினால்
உங்க வாழ்க்கையில் சனிஸ்வர கிரகத்தினால் எந்த விதமான பாதிப்பும் எப்பொழுதும் வரவே வராது மேலும் உஙகள் வாழ்வில் உள்ள அனைத்துவிதமான தோஷங்கள், பாவங்கள் எல்லாம் நீங்கி சந்தோசமான இனிமையான வாழ்க்கை கிடைக்கும்.

பிறகென்ன… வெற்றி வெற்றி எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான்.